பட்டாபிராமில் மாயமான முதியவர் சடலமாக மீட்பு : போலீஸ் விசாரணை
5/16/2015 12:31:59 PM
பட்டாபிராம்: சென்னைக்கு அருகே ஆவடியை அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மோகனரங்கம் (77). ராயபுரத்தில் உள்ள தனியார் அச்சககத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.கடந்த 6-ம் தேதி வேலைக்கு சென்ற மோகனரங்கம், அதன்பின்னர் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதையடுத்து, அவரது மகன் பாலாஜி கடந்த 8-ம் தேதி பட்டாபிராம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மோகனரங்கத்தை தேடிவந்தனர்.இந்நிலையில், பட்டாபிராம் கோபாலபுரம் மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக, பட்டாபிராம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆவடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீ்ட்டனர்.இதையடுத்து போலீசாரின் விசாரணையில், அங்கு சடலமாக கிடந்தது மாயமான மோகனரங்கம்தான் எனத் தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனரங்கத்தின் மர்மச் சாவு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் நேற்று பட்டாபிராம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.