இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ரூ. 949 கோடியில் மும்பையை கண்காணிக்க 6 ஆயிரம் கேமராக்கள் முதல்வர் பட்நவிஸ் அறிவிப்பு

5/16/2015 12:22:10 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி


மும்பை: மும்பை நகரை கண்காணிக்க 6 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் அறிவித்துள்ளார்.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல்வழியாக வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து மும்பையில் தீவிர கண்காணிப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் பலப்படுத்தி வருகின்றன. பின்னர் சக்தி மில் வளாகத்தில் பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால் இங்கு கூடுதல் பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.  பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டெல்லியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என ஆம் ஆத்மி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த சில வாரங்களுக்கு முன்புஅறிவித்திருந்தார்.

தற்போது டெல்லியைத் ெதாடர்ந்து மும்பையிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க பாஜ முதல்வர் பட்நவிஸ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே பி பக்சி கூறுகையில், 2008ம் ஆண்டு தாக்குதலுக்கு பிறகு மும்பை நகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில முக்கிய இடங்களில் ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தற்போது நான்கு முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரும் நகர் முழுவதும் கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது சுமார் ₹949 கோடி செலவில் அடுத்தாண்டு செப்டம்பருக்குள் சுமார் 6 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் நகர் முழுவதும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக மும்பை தெற்கு பகுதியில் இந்த ஆண்டு நவம்பருக்குள் பொருத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை ஆணையர் அலுவலகம், பேரிடர் மீட்பு கண்காணிப்பு மையம், போக்குவரத்து காவல் தலைமையகம் ஆகிய இடங்களில் இருந்து இந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு கவனிக்கப்படும். இந்த கேமராக்கள் மூலமாக 21 நாட்களுக்கு காட்சிகள் பதிவு செய்து வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள்



  • மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி



  • நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய விடமாட்டோம்



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காத்திருக்க வேண்டாம்



  • தெகல்கா ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை விசாரிக்க மேலும் ஓராண்டு அனுமதி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • ஓராண்டை வீணாக்கியதை தவிர மோடி அரசின் சாதனை எதுவும் இல்லை: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குற்றச்சாட்டு



  • உத்தரகண்ட் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை: கவர்னரிடம் பாஜ எம்பி கோரிக்கை



  • ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு : அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தகவல்



  • தெலங்கானாவில் நடைபயணம் தொடங்கினார் ராகுல்



  • ஜனதா பரிவார் கட்சிகள் இணைவதில் சிக்கல் : லாலு பிரசாத் தகவல்



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]