இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தெலங்கானாவில் நடைபயணம் தொடங்கினார் ராகுல்

5/15/2015 2:25:15 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

ஐதராபாத்: தெலங்கானாவில் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் பகுதிகளில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று நடைபயணம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது இரண்டு மாத விடுமுறையில் வெளிநாடு சென்றிருந்த ராகுல், இரண்டாவது பகுதியின் போது நாடு திரும்பினார். இதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு, விவசாயிகள் பிரச்னை, நெட் நியூட்ராலிட்டி என்று மத்திய அரசின் மசோதாக்களுக்கு எதிராக தீவிரமாக களம் இறங்கினார். மேலும் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்து பஞ்சாப், அரியானா ஆகிய பகுதிகளுக்கு சென்று விவசாயிகளை நேரில் சந்தித்தார். தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ராகுல் தனது நடைபயணத்ைத மீண்டும் தொடங்கியுள்ளார். தெலங்கானாவில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படும் பகுதியான அடிலாபாத் மாவட்டத்தில் இன்று சுமார் 15 கிமீ நேரடியாக நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில் கடந்த காலத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரையும் சந்திக்கிறார். மேலும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட வேல்மா ராஜேஸ்வர் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியை காங்கிரஸ் சார்பில் ராகுல் வழங்குகிறார். லட்சுமண் சந்தா, பொட்டி பள்ளி, ரச்சாபூர், வேதியல் ஆகிய பகுதிகளில் பிற்பகல் வரை விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.ராகுலின் இந்த நடைபயணம் தெலங்கானா விவசாயிகள் மத்தியில் அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என மாநில தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தெலங்கானாவில் டிஆர்எஸ் ஆட்சிக்கு பிறகு விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில் ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள்



  • மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி



  • நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய விடமாட்டோம்



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காத்திருக்க வேண்டாம்



  • தெகல்கா ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை விசாரிக்க மேலும் ஓராண்டு அனுமதி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • ஓராண்டை வீணாக்கியதை தவிர மோடி அரசின் சாதனை எதுவும் இல்லை: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குற்றச்சாட்டு



  • உத்தரகண்ட் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை: கவர்னரிடம் பாஜ எம்பி கோரிக்கை



  • ரூ. 949 கோடியில் மும்பையை கண்காணிக்க 6 ஆயிரம் கேமராக்கள் முதல்வர் பட்நவிஸ் அறிவிப்பு



  • ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு : அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தகவல்



  • ஜனதா பரிவார் கட்சிகள் இணைவதில் சிக்கல் : லாலு பிரசாத் தகவல்



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]