கோயில் புதுப்பிக்க பள்ளம் தோண்டியபோது முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் கண்டெடுப்பு
5/8/2025 3:33:44 PM
வாலாஜாபாத்: கோயில் புதுப்பிக்க பள்ளம் தோண்டியபோது முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட 6 சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.வாலாஜாபாத் அடுத்த குண்ணவாக்கம் ஊராட்சியில் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. பழமைவாய்ந்த இக்கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து கோயிலை புதுப்பிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கினர். இன்று காலை பள்ளம் தோண்டினர். அப்போது 2 அடி முதல் 3 அடி உயரம் கொண்ட முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் தட்சிணாமூர்த்தி, ஈஸ்வரர் உள்ளிட்ட 6 சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிலைகளை கோயிலில் வைத்து தீபாராதனை காட்டி சிறப்பு பூஜை செய்தனர். சிலைகளை பார்க்க மக்கள் திரண்டதால் பரபரப்பு காணப்பட்டது.