இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காலி குடங்களுடன் திமுக கவுன்சிலர்கள் போராட்டம் : ரிப்பன் மாளிகையில் பரபரப்பு

4/30/2015 3:26:33 PM
சுற்றுலா வேன்-அரசு பஸ் மோதல் ஒரே குடும்பத்தில் 5 பேர் நசுங்கி பலி பாகிஸ்தான் கொடியை காட்டிய ஹிலானியை நாடு கடத்த வேண்டும் : சிவசேனா கடும் தாக்கு

சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று காலை ரிப்பன் மாளிகை மன்ற கூடத்தில் நடைபெற்றது. தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசி  கொண்டிருந்தனர். அப்போது எதிர்கட்சி தலைவர் சுபாஷ் சந்திர போஸ் எழுந்து சென்னையில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது என்று பேசினார். இதற்கு  மேயர் சைதை துரைசாமி அடிப்படை ஞானமில்லாமல் குடிநீர் பிரச்சனை பற்றி பேசாதீர்கள் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுபாஷ் சந்திர போஸ்  தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.வெளிநடப்புக்கு பின்னர் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை பாட்டிலில் பிடித்தும்,  காலி குடங்களுடன் திமுக உறுப்பினர்கள் ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘குடம் இருக்கு குடிநீர் எங்கே, குடிநீர்  பஞ்சத்தை போக்க மாநகராட்சியே நடவடிக்கை எடு’ என்று உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

தொடர்ந்து நிருபர்களிடம் எதிர்க்கட்சி தலைவரும், திமுக கவுன்சிலருமான சுபாஷ் கூறும் போது, ‘‘சென்னையில் 1 கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.  அவர்களுக்கு குடிப்பதற்காக முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை. அவ்வாறு செய்வதாலும் குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது. அவர்கள் அரசிடம் நேரடியாக  பேச முடியாது என்பதற்காக வார்டு உறுப்பினர்களாக எங்களை தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால், மற்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் பேச அனுமதி  மறுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. போர்க்கால நடவடிக்கை எடுத்து உடனடியாக  சென்னை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும்’’ என்றார்.

மேலும் சில
  • சுற்றுலா வேன்-அரசு பஸ் மோதல் ஒரே குடும்பத்தில் 5 பேர் நசுங்கி பலி



  • அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்



  • பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்



  • திருநங்கைகள் உரிமைகள் மசோதா மக்களவையிலும் வெற்றி பெறும் : திருச்சி சிவா எம்.பி. பேட்டி



  • செம்முனீஸ்வரர் கோயில் விழாவில் 4 ஆயிரம் ஆடுகள் பலி



  • பணி பாதுகாப்பு கோரி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் டாக்டர்கள் ஸ்டிரைக்



  • பாக்கெட் சாராயம் விற்பனை: கும்பகோணத்தில் படுஜோர் விருது பெற்ற மாவட்டத்தில் அவலம்



  • நெடுங்குன்றம் ஊராட்சியில் போர்வெல் மூலம் குடிநீர்



  • மதுராந்தகம் அருகே தறிகெட்டு ஓடிய வேன் 2 கார்கள் மீது மோதல் : 7 பேர் காயம்



  • திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக தொழிற்சங்கம் மே தின பேரணி



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]