இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை

4/30/2015 2:10:47 PM
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: குன்னூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி பேரணியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு அந்த கட்சியின் தொண்டர்கள் தான் காரணம் என டெல்லி போலீசார் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேரணி நடத்தி வருகின்றன. சுமார் இரண்டு மாதங்கள் வெளிநாட்டில் ஓய்வு எடுத்து விட்டு அண்மையில் நாடு திரும்பிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடந்த 19ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் பேரணி நடத்தினர். இதை தொடர்ந்து ஆம் ஆத்மி சார்பாக கடந்த வாரம் டெல்லி ஜந்தர் மந்தரில் பேரணி நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், உ.பி,அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கஜேந்திரசிங் என்ற 41 வயது விவசாயி மரத்தில் ஏறி தனது துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆம் ஆத்மி தொண்டர்கள் முன்னிலையில் இந்த சம்பவம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. இந்த சம்பவத்ைத போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினரும், விவசாயி அருகில் செல்ல விடாமல் கூட்டத்தினர் தடுத்து விட்டதாக போலீசாரும் பரஸ்பரம் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி போலீசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மியே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பேரணியில் ஆம் ஆத்மி தலைவர்கள் ஆவேசமாக பேசினார்கள்.

 பேரணியில் கூடியிருந்த விவசாயிகளை உசுப்பிவிடும் வகையில் ஆக்ரோஷமாக பேசினார்கள். கஜேந்திரசிங்கை மரத்தில் ஏற தூண்டியது ஆம் ஆத்மி தொண்டர்கள் தான். அவரை தூக்கில் தொங்க தூண்டி விட்டதும் ஆம் ஆத்மியினர் தான். கஜேந்திரசிங் உடலை பிரேத பரிசோதனை செய்யவிடாமல் தடுத்தது கெஜ்ரிவால் அரசு தான். விவசாயிகள் பேரணியை ராம் லீலா மைதானத்தில் நடத்துங்கள் என போலீசார் தெரிவித்த யோசனையை நிராகரித்தது ஆம் ஆத்மி கட்சிதான். இவ்வாறு டெல்லி போலீசார் அறிக்கையில் கூறியுள்ளனர்.

மேலும் சில
  • தீவிரவாதிகளுக்கு தனி சிறை மாநிலங்களுக்கு ராஜ்நாத் சிங் கடிதம்



  • தாய், மகள் பலாத்கார விவகாரம் : குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்



  • மகளிர் காவல் நிலையங்களில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : அரியானா பாஜ அரசு உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு



  • ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு



  • போலி சான்றிதழ் கொடுத்த ஆம் ஆத்மி அரசின் சட்ட அமைச்சர் தோமரை நீக்க வேண்டும் : டெல்லியில் பாஜ போராட்டம்



  • நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி பயணத்தை விமர்சனம் செய்வதா : அருண் ஜெட்லி



  • பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்



  • மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்



  • அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி



  • மத்திய அரசு மேம்படுத்தவுள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகள்



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]