சவுதியில் கட்டிடம் இடிந்ததில் இந்தியர் உள்பட 10 பேர் பலி
4/29/2015 2:45:54 PM
ரியாத்: சவுதி அரேபியாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த இந்தியர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.பாகிஸ்தான் தலைநகர் ரியாத்துக்கு வடமேற்கே உள்ள காசிம் நகர பல்கலைக்கழகத்தில் பலமாடி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. நேற்று இரண்டாவது மாடி எழுப்பும் பணிகள் நடந்தன. 90 சதவீத பரப்பில் கான்கிரீட் கொட்டும் முடிந்தது. கட்டுமான பணியில் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் 2 வது மாடி அப்படியே சரிந்தது. கட்டிட இடிபாடுகளில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கினர். இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தொடங்கினர். 20 பேர் சிறிய காயங்களுடனும், 10 பேர் படுகாயத்துடனும் மீட்கப்பட்டனர். 10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் இந்தியர். மற்றவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். இடிபாடுகளில் உயிருடன் யாரேனும் இருக்கிறார்களா என்பதை அறிய சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இதற்கிடையில் கட்டிட விபத்தில் 9 பேர் மட்டுமே உயிரிழந்தாக கட்டுமான நிறுவனம் அறிவித்துள்ளது. இறந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரத்தையும் அறிவிக்க மறுத்துவிட்டது.