இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நாளை மறுநாள் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி: டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை

1/24/2021 6:12:11 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

புதுடெல்லி: டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ெடல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதையடுத்து பஞ்சாப், அரியானாவில் இருந்து டெல்லிக்கு ஏராளமான வாகனங்கள் படையெடுத்து வருவதால், போலீசார் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள், குடியரசு தினத்தன்று (நாளை மறுநாள்) டெல்லியில் ‘கிசான் கந்தந்திர பேரணி‘ என்ற பெயரில் (விவசாயிகளின் குடியரசு தினம்), டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தன.

இதற்கு இடைக்கால தடை விதிக்க மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த போது நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. தொடர்ந்து, டிராக்டர் பேரணியை நெரிசல் மிகுந்த வெளிவட்டச்சாலைக்கு பதிலாக மாற்றுப்பாதையில் நடத்துமாறு விவசாய சங்கங்களிடம் டெல்லி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் விவசாய சங்கங்கள் மறுத்து விட்டன. இருதரப்புக்கும் இடையே தொடங்கிய பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் போலீஸ் அதிகாரிகளுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது டெல்லி நகருக்குள் டிராக்டர் பேரணியை சில விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாய சங்கத்தலைவர் அபிமன்யு கோகர் கூறுகையில், ‘டெல்லி நகரில் டிராக்டர் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். காசிப்பூர், சிங்கு, திக்ரி, பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய எல்லைகளில் இருந்து டிராக்டர் பேரணி தொடங்கும். எல்லையில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு, நாளை மறுநாள் பேரணி நடத்தப்படும். மேலும், டெல்லியை சுற்றியுள்ள 100 கி.மீ தூரத்திற்கு ஐந்து வெவ்வேறு பாதைகளில் டிராக்டர் ஓட்டி வர அனுமதிக்கப்பட்டுள்ளது. டிராக்டர் அணிவகுப்பு முடிந்த பிறகு டெல்லி நகரத்தில் தங்க அனுமதி கிடையாது. மேலும் விபரங்கள் வழிகாட்டல் நெறிமுறைகள் இன்று (ஜன. 24) இறுதிசெய்யப்படும்.

குடியரசு தின பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் எந்தவொரு வழியையும் பின்பற்றக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதற்கு விவசாயிகள் சங்கங்கள் ஒப்புக் கொண்டன. பேரணி நடத்த அனுமதி கிடைத்துள்ளதால், டெல்லி காவல்துறையும், மத்திய அரசும் விவசாயிகளின் வலிமைக்கு தலைவணங்கி உள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும். பேரணியானது நாளை மறுநாள் தொடங்கி 72 மணி நேரம் வரை நீடிக்கும். எல்லைப் பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் வரும் டிராக்டர்கள், பின்னர் அணிவகுத்து மீண்டும் அவர்களின் எல்லைக்கு சென்றுவிடுவார்கள்’ என்றார்.

இதற்கிடையே, பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம், அரியானா மாநிலம் சிர்சா மாவட்டம் ஆகியவற்றில் இருந்து சுமார் 30 ஆயிரம் டிராக்டர்களில் மளிகை பொருட்கள், படுக்கைகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு விவசாயிகள் நேற்று டெல்லியை நோக்கி புறப்பட்டனர். சில விவசாயிகள் டீசலை மிச்சப்படுத்துவதற்காக, மற்ற விவசாயியின் டிரெய்லரில் தங்கள் டிராக்டரை ஏற்றி வைத்தும், வேறு சிலர் மற்ற டிராக்டருடன் தங்கள் டிராக்டரை கயிற்றால் இணைத்தும் கொண்டு சென்றனர். குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் ஒருபக்கம் நடைபெறும் நிலையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணியும் நடப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், உளவுதுறை அறிக்கையின்படி எல்லைகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், குடியரசு தின விழாவிற்கான வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை காட்டிலும் கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்ய டெல்லி போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



  • சக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் ‘மீடூ’-வில் சிக்கிய ஹார்விக்கு சிறை; அக்பருக்கு கிடைத்தது என்ன?: இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் குமுறல் தொடர்கிறது



  • 3 மாநிலத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை: 19 நாளில் 13 முறை விலை உயர்வு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]