இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்

10/24/2020 5:32:54 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

வங்கிக்கு ரூ6,500 கோடி வரை மத்திய அரசு செலுத்துகிறது

புதுடெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைகளுக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி ரத்து சலுகை பெறுதல் தொடர்பாக  வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் வங்கிகளுக்கு மத்திய அரசு ₹6,500 கோடி வரை செலுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கொரோனா தொற்று பரவலால் கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியதால், பல்வேறு தொழில் நிறுவனங்களும் கடும் இழப்பைச் சந்தித்தன. இதையடுத்து தனிநபர்கள், நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்களுக்கான தவணைகள் வசூலிக்கப்படுவதை மார்ச் 1 முதல் மே 31 வரை ஒத்திவைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. பின்னர் அது ஆக. 31ம் தேதி வரை நீட்டித்தது.  ஆனால், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வங்கிகள் வட்டி மீது வட்டி வசூலிக்கத் திட்டமிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இவ்வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, கடன் தவணை வசூல் ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு மட்டும் வட்டி மீது வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதுதவிர, வேறு எந்த சலுகை நடவடிக்கை மேற்கொண்டாலும், அது நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணைக்கும் முடிவுற்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில், ‘மக்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைகளுக்கு மட்டும் வட்டி மீது வட்டி வசூலிப்பதை ரத்து செய்யும் முடிவை ஏற்கிறோம். இந்த வட்டி மீது வட்டி ரத்து பற்றிய தகவல் சாமானிய மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா? கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டி வசூலிப்பதை விரைந்து ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை நவ. 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வட்டிக்கு வட்டி ரத்து தொடர்பான வழிகாட்டுதலுக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கும், ஆறு மாத காலங்களில் வழங்கப்பட்ட கடனுக்கும், ஒட்டுமொத்த வட்டி, அதாவது வட்டிக்கு வட்டி மற்றும் எளிய வட்டிக்கு இடையிலான சமமான தொகையை மத்திய அரசு வங்கிக்கு செலுத்தும். அதாவது 2020 மார்ச் 1 முதல் 2020 ஆகஸ்ட் 31ம் தேதி வரையில் வட்டிக்கு வட்டி ரத்து சலுைக பொருந்தும். இதன்படி, பிப்ரவரி 29ம் தேதி வரை மொத்தக் கடன் ரூ.2 கோடிக்கு மேல் வாங்காத கடனாளிகள் இந்த திட்டத்தால் பயனடைவர்.

மேலும், வீட்டுக் கடன்கள், கல்வி கடன்கள், கிரெடிட் கார்டு பாக்கிகள், வாகனக் கடன்கள், எம்.எஸ்.எம்.இ (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்), நுகர்வுக்கான கடன்கள் பெற்றவர்களுக்கு பயன் கிடைக்கும். வட்டிக்கு வட்டி இடையிலான சமமான தொகையானது சம்பந்தப்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களின் கடன் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இது, மார்ச் 27, 2020 அன்று அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, கடன் தள்ளுபடி தொடர்பாக ரிசர்வ் வங்கி வழங்கிய வழிகாட்டுதலின்படியோ தகுதியான அனைத்து கடன் பெற்றவர்களுக்கும் பொருந்தும் என்று தெரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்திட மத்திய அரசு கருவூலத்திற்கு ரூ.6,500 கோடி செலவாகும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



  • 3வது இறுதிக்கட்ட பரிசோதனை நடக்கும் நிலையில் சென்னையை சேர்ந்த தடுப்பூசி: தன்னார்வலருக்கு திடீர் பாதிப்பு?



  • 4ம் நாளாக விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]