இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு

9/30/2020 5:21:13 PM
சென்னையில் விடியற்காலை முதல் மழை சட்டசபை தேர்தல் குறித்து வடக்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மாணவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செய்துவரும் துரோகங்களை மக்களிடம் விளக்கும்படி வலியுறுத்தினார்

சென்னை: ரயில்ேவ நிர்வாகம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து எழும்பூர்-நெல்லை, செங்கோட்டை, ராமேஸ்வரம், கொல்லம் இடையே கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்குவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு ெவளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 7ம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்ட்ரலில் இருந்து டெல்லி போன்ற வடமாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து கூடுதலாக தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து அதற்கான ஒப்புதல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எழும்பூரில் இருந்து 7 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி சென்னை எழும்பூர்-நெல்லை இடையே (ரயில் 02631) தினமும் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மாம்பலம், தாம்பரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நெல்லைக்கு மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக நெல்லை- எழும்பூர் இடையே (ரயில்எண் 02632) இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு மறுநாள் காலை 6.35 மணிக்கு வந்தடையும். மேலும் சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே (ரயில்எண் 02661) தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், திருச்சி, மதுரை, தென்காசி வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு செங்கோட்டைக்கு சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து (ரயில்எண் 02662) இரவு 6.10 மணிக்கு புறப்பட்டு அதேவழியாக சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு காலை 6 மணிக்கு வந்தடையும்.

மேலும் சென்னை எழும்பூர்- மதுரை இடையே தேஜஸ் (ரயில் எண்02613) வாரத்தில் 6 நாட்கள் காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சி, கொடைக்கானல்ரோடு வழியாக மதுரைக்கு பிற்பகல் 12.10 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக மதுரையில் இருந்து (ரயில் எண் 02614) பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு அதேவழியாக மதுரைக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடையும். மேலும் சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் எண் (02205) தினமும் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், அரியலூர், காரைக்குடி, பரமக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு மறுநாள் காலை 4.25 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் (02206) இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தடையும்.

அதைப்போன்று எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் (06723) தினமும் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மாம்பலம், திருச்சி, மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் வழியாக கொல்லத்திற்கு மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று கொல்லத்தில் இருந்து ரயில் எண் (06724) தினமும் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு அதேவழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 8.10 மணிக்கு வந்தடையும். மேலும் சென்னை ெசன்ட்ரல்- ஆலப்புழா- சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் எண் (22639,22640) தினமும் இயக்கப்படுகிறது. அதைப்போன்று காரைக்கால்- எர்ணாகுளம்- காரைக்கால் இடையே சிறப்பு ரயில் எண் (16187, 16188) இயக்கப்படுகிறது. ஏற்கனவே 13க்கும் மேற்ப்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்கும் வகையில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து தேதி, நேரம் என்ற பட்டியலை தயார் செய்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை அனுப்பப்பட்டுள்ளதையடுத்து ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து வரும் 2ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க வாய்ப்புள்ளது. இந்த சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அனைத்து பயணிகளும் ரயில் நிலையத்துக்கு வரும் போதும், பயணத்தின்போதும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அனைத்து பயணிகளும் பயண நேரத்துக்கு 90 நிமிடங்கள் முன்னாள் ரயில் நிலையம் வர வேண்டும். பயணம் செய்யும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். ரயில் நிலையத்திலும், பயணத்தின்போதும் சமூக இடைவெளியை பயணிகள் கடைபிடிக்க வேண்டும்.

மேலும் சில
  • சென்னையில் விடியற்காலை முதல் மழை



  • சட்டசபை தேர்தல் குறித்து வடக்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மாணவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செய்துவரும் துரோகங்களை மக்களிடம் விளக்கும்படி வலியுறுத்தினார்



  • கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் திறக்க நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு



  • திருமாவளவனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு செல்லும் வழியில் நடிகை குஷ்பு அதிரடி கைது: விடுதியை முற்றுகையிட்ட விசிகவினர் மீது போலீசார் தடியடி



  • தங்கம் விலை கிடு,கிடு; பவுனுக்கு ரூ512 அதிகரிப்பு: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி



  • 7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்



  • முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆயுத பூஜை வாழ்த்து



  • பள்ளி, தியேட்டர் திறப்பு தொடர்பாக 28ம் தேதி கலெக்டர்கள், மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை



  • மருத்துவக் கல்வியைப் போன்று இன்ஜி. படிப்புக்கு நுழைவு தேர்வு தேவையில்லை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்



  • அதிகாரிகளின் அலட்சியத்தால், மழையில் நனைந்த 2000 மூட்டை நெல் முளைத்தது: தஞ்சை அருகே கொள்முதல் நிறுத்தம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]