இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி; மனிதர்களுக்கு செலுத்தி சோதனை: 2000 பேர் பரிசோதனைக்கு ஒப்புதல்

9/24/2020 5:16:04 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

லண்டன்: கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முதல்கட்ட முயற்சியில் இங்கிலாந்து இறங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 9 லட்சத்து 72,100 பேர் பலியாகியுள்ளனர்.  அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர். உலக அளவில் கொரோனா பலியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை  90,020 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி, ரஷ்ய விஞ்ஞானிகள் என பல தரப்புகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யா, கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாகவும் அதை சோதனை செய்து பார்க்கவும் முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தில் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்தால் அதை சோதனை செய்வதற்கு அந்நாட்டில் உள்ள மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். இந்நிலையில், இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கொரோனா பாதித்துள்ள நோயாளிகளுக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்தும் சவாலான சோதனையை நடத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இந்த சோதனைக்காக இங்கிலாந்தில் சுமார் 2000 கொரோனா நோய் தாக்கிய தன்னார்வலர்கள் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர். இந்த சோதனை 2021 ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தின் இந்த முயற்சிக்கு உலக நாடுகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • சீன தயாரிப்பு தடுப்பூசி போட்ட நிலையில் இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு



  • இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை..! அதிகாரிகள் அட்வான்ஸ் குழு நாளை காலை தமிழகம் வருகிறது



  • ரத்த கட்டு சம்பவங்களை தொடர்ந்து 9 நாடுகளில் ஆஸ்டிரா தடுப்பூசிக்கு தடை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்



  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



  • தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை



  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]