இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் இன்று பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: கட்டண அதிகரிப்பால் அதிருப்தி

6/1/2025 3:40:10 PM
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்; அதிர்ச்சியளிக்கும் ரயில்வே அறிக்கை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: வீரியம் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை தளர்த்தியது ஏன்?

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் இன்று பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கட்டணம் அதிகரித்துள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுக்கு பிறகு, உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து இன்று 48 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், விஜயவாடா, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 24 விமானங்களில் 3,100 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் 24 விமானங்களில் 1,100 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் இன்றுதான் அதிகளவிலான பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனாலும் வெளிமாநிலம், மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக உள்ளது. இதற்கு காரணம், இ-பாஸ் கட்டாயம், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல், கைகளில் முத்திரை குத்துவது மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது போன்றவைதான்.

மேலும், கட்டணம் அதிகளவில் இருப்பதும் காரணமாகும். சென்னை- கொல்கத்தா குறைந்த கட்டணம் ரூ.6,500 என்று இணையத்தில் காட்டுகிறது. முன்பதிவு செய்யும்போது அந்த கட்டண டிக்கெட் இல்லை. ரூ.15,500 டிக்கெட்தான் இணையத்தில் வருகிறது. அதுவும் ஓரிருவருக்கு மட்டுமே கிடைக்கிறது. இதையடுத்து, ரூ.29,500 டிக்கெட்தான் உள்ளது என்று கூறி, அதிக கட்டண டிக்கெட் வாங்க கட்டாயப்படுத்ததுகின்றனர். அதேபோல் டெல்லி, அந்தமான், மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பயணம் செய்ய தயங்குகின்றனர்.

ஆனால் சென்னையில் இருந்து செல்பவர்கள், எவ்வளவு பணம் என்றாலும் டிக்கெட் எடுத்து சொந்த ஊர் திரும்புகின்றனர். எனவே தான் சென்னையில் இருந்து அதிகளவில் பயணிகள் செல்வதும், வருகையில் குறைவாக இருப்பதாகவும்
கூறப்படுகிறது.

மேலும் சில
  • 68 நாட்கள் ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தில் பஸ், ரயில்கள் ஓடின: சென்னையில் இன்று ஆட்டோ, டாக்சிகள் இயக்கம்



  • வரலாற்றில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடல்



  • நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு; பஸ், ரயில்கள் ஓடவில்லை: வழிபாட்டு தலங்கள் மூடல்



  • கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பேரவை கூட்டம் 31ம் தேதியுடன் முடிவு



  • கொரோனாவுக்கு எதிராக நாளை மக்கள் ஊரடங்கு: ரயில், பஸ், லாரிகள் ஓடாது



  • கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி: இதுவரை 28 பேருக்கு சிகிச்சை



  • கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டினாலும் சென்னையில் வாகன நெரிசல் குறையவில்லை: மைதானங்களை மூடியதால் சாலைகளில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள்



  • திருச்சி, தென் மாவட்டங்களில் பரவுகிறது கொரோனா: 73 பேருக்கு பரிசோதனை



  • நீதிபதி வீட்டில் மயங்கி விழுந்தார்: லஞ்சம் வாங்கி கைதான பெண் பிடிஓ திடீர் சாவு



  • கொரோனா பரவுவதை தடுக்க ஆன்லைன் மூலமாக மின் கட்டணம்: மின்வாரியம் அறிவுறுத்தல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]