இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

‘வேலைக்கு ஏற்பாடு செய்ததற்கு கிடைத்த கைமாறு’பணம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் நெல்லூரில் மீட்பு: உ.பி. வாலிபர் கைது; ஆவடியில் பரபரப்பு

3/18/2020 3:19:07 PM
உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

ஆவடி: பணம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் நெல்லூரில் மீட்கப்பட்டான். இது தொடர்பாக உ.பி. வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலை இல்லாமல் இருந்தவரை அழைத்து வந்து வேலைக்கு ஏற்பாடு செய்ததற்கு கிடைத்த கைமாறு என சிறுவனின் தந்தை நொந்து கொண்டார். ஆவடி சேக்காடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராதேஷ் ஷியாம் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராக்கி (23). இவர்களது மகன் ஆந்தேஷ் (2). ெசாந்த ஊர் மத்திய பிரதேசம். ராதேஷ் ஷியாமின் உறவினர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சன்னி (24). இவர் வேலை இல்லாமல் இருந்ததால், சென்னை வரவழைத்தார் ராதேஷ் ஷியாம். பின்னர் தனது வீட்டிலேயே தங்க வைத்து வேலையும் வாங்கி கொடுத்தார். சன்னி, கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் ஆந்தேஷை கடைக்கு அழைத்து சென்றார் சன்னி. வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராதேஷ் ஷியாம், கடைக்கு சென்று தேடினார். அக்கம் பக்கத்தில் விசாரித்தார். எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு, ராதேஷ் சியாமுக்கு போன் அழைப்பு வந்தது. அதில், பேசிய சன்னி, ‘எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அதனால் உனது மகனை கடத்தி வைத்துள்ளேன். எனக்கு தேவையான பணத்தை கொடுத்தால் உனது மகனை விட்டு விடுகிறேன். இல்லாவிட்டால் கொன்று விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார்.
இதை கேட்டதும் ராதேஷ் ஷியாம் செய்வதறியாது திகைத்தார். பின்னர், ஆவடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

மிரட்டல் விடுத்த செல்போன் நம்பரை ஆய்வு செய்தனர். ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், நெல்லூருக்கு விரைந்து சென்று, சன்னி தங்கியிருந்த லாட்ஜை சுற்றி வளைத்தனர். தப்பி ஓட முயன்ற அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆந்தேஷை மீட்டனர். பின்னர் சன்னியை இன்று அதிகாலை சென்னைக்கு அழைத்து வந்தனர். ஆந்தேஷ், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். கண்ணீர் மல்க குழந்தையை கட்டிதழுவினர். கைதான சன்னியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



  • முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]