சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 8 ஆண்டு சிறை: கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
2/19/2020 4:01:20 PM
கடலூர்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருத்தாசலம் அருகே தெற்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினரின் 16 வயது சிறுமியை கடந்த 12.2.2025 அன்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர்.
இதுசம்பந்தமான வழக்கு விசாரணை கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நீதிபதி கருணாநிதி அளித்த தீர்ப்பில், ‘’ போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பழனிவேலுக்கு 8 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுகிறது’ என்றார். இதைதொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் பழனிவேல் அடைக்கப்பட்டார்.