செம்மரக்கட்டைகள் கடத்திய சென்னை ராணுவ வீரர் கைது: விடுமுறையில் வந்து கைவரிசை
2/4/2025 4:31:39 PM
திருமலை: திருப்பதி அருகே கார்களில் கடத்திய ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி - சென்னை சாலையில் தடுக்குப்பேட்டை சோதனைச்சாவடியில் நகரி போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 14 செம்மரக்கட்டைகள், 3 கத்திகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், சென்னையை சேர்ந்த ராணுவ வீரர் சதீஷ், டிரைவர் மைக்கேல், தங்கராஜ், குப்புசாமி, முருகன் ஆகியோர் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், ரூ.30 லட்சம் மதிப்புள்ள 14 செம்மரக்கட்டைகள், 3 கத்திகளை பறிமுதல் செய்தனர்.செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட சதீஷ், ஜம்முகாஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் வந்த அவர் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.