மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் 2 வாலிபர் கைது
2/4/2025 3:50:17 PM
கோத்தகிரி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, சோலூர்மட்டம் அருகேயுள்ள தும்பிமலை கிராமத்தை சேர்ந்த முரளி(26), ஒசகேரி கிராமத்தை கோகுல்ராஜ் (28) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவரை காரில் கடத்திச் சென்று மாணவிக்கு அவர்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து முரளி, கோகுல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.