இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தந்தை என்கவுன்டர், தாய் அடித்துக் கொலை: தவித்த சிறுமியை தத்தெடுத்த போலீஸ் ஐஜி: உத்தரபிரதேச மாநிலத்தில் நெகிழ்ச்சி

2/3/2025 4:44:36 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் தந்தை போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். தாய் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். அனாதையாக தவித்த அவர்களது குழந்தையை  போலீஸ் ஐஜி தத்ெதடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில், கடந்த 30ம் தேதி 23 குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்த சுபாஷ் பாதம், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்  கொல்லப்பட்டார். அதன்பின், 23 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். சுபாஷ் பாதம் மனைவி ரூபியும், கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். நிலைமை  இவ்வாறு இருக்க, கொலையான தம்பதியின் ஒரு வயது குழந்தை தற்போது அனாதையாக உள்ளது. இந்நிலையில், அந்த ஒரு வயது பெண் குழந்தையை  போலீசார் தத்தெடுக்க உள்ளதாக கான்பூர் ரேஞ்ச் ஐஜி மோஹித் அகர்வால் தெரிவித்தார்.

இதுகுறித்து, ஐஜி மோஹித் அகர்வால் கூறுகையில், ‘‘சிறுமிக்கான கல்வி மற்றும் பிற எல்லா செலவுகளை ஏற்போம். அவள் வளர்ந்து ஐ.பி.எஸ் அதிகாரியாக  வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அனைத்து சட்ட முறைகளுக்கும் பிறகு, அந்த சிறுமி தத்தெடுக்கப்படுவார். நாங்கள் அவளை ஒரு நல்ல உறைவிடப்  பள்ளிக்கு அனுப்புவோம். நான் அவளை என் சொந்த மேற்பார்வையில் வைத்திருப்பேன்” என்றார்.  பெற்றோரை இழந்த அந்த சிறுமி தற்போது, பருகாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை, 2 பெண் கான்ஸ்டபிள்கள்  பார்த்துக் கொள்கின்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட சுபாஷ் மற்றும் ரூபி ஆகியோர் தங்கள் குடும்பங்களின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டனர்.  அதனால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அந்த சிறுமியை பாதுகாக்க முன்வரவில்லை. தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாடும் சாக்கில்,  சுபாஷ் 23 குழந்தைகளை அழைத்து தனது வீட்டின் அடித்தளத்தில் பிணைக் கைதிகளாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுபாஷ் பாதம் 2002ம் ஆண்டு கொலை வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். மேலும் நான்கு குற்ற வழக்குகளை எதிர்கொண்டிருந்தார்.  

சமீபத்தில் ஒரு திருட்டு வழக்கில் சிறையில் இருந்த அவர், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கொலை வழக்கில் இருந்து தப்பிக்க  குழந்தைகளை பணயக்கைதியாக அடைத்து வைத்து நாடகத்தை நடத்தியபோது சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது, அவரது மகள் போலீசாரின் பாதுகாப்பில் வளர  உள்ளதால், உத்தரபிரதேச மக்கள் இச்சம்பவத்தை விநோதமாகவும், நெகிழ்ச்சியடைந்தும் உள்ளனர்.

மேலும் சில
  • சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஆளுநர் மீது வழக்கு: உத்தரபிரதேச போலீஸ் நடவடிக்கை



  • திருப்பதி கோயில் உண்டியலில் செலுத்திய கை கடிகாரங்கள் ஆன்லைனில் ஏலம்



  • மருத்துவமனையில் 84 பேர் கண்காணிப்பு: கேரளாவை மிரட்டும் கொரோனா...மாநில பேரிடராக அறிவிப்பு



  • கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு



  • வரும் 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் டெல்லியில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி? : கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்



  • ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் செல்லும் பைப் லைனில் கேஸ் கசிவு: மின்சாரம் துண்டிப்பு; மக்கள் ஓட்டம்



  • தமிழ்நாடு, பெங்களூரு, டெல்லியில் ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது எதிரொலி: போலீசாருக்கு தீவிரவாதிகள் மிரட்டல்...தமிழில் எழுதப்பட்ட அச்சுறுத்தல் பதிவு சிக்கியது



  • சிஏஏ ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது 4 நாளில் 3வது முறையாக டெல்லியில் நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு...தேர்தல் பணியில் இருந்து போலீஸ் அதிகாரி அதிரடி நீக்கம்



  • உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு முன்பாக சபரிமலை வழக்கு நாளை விசாரணை



  • சீனாவில் இருந்து 2வது முறையாக இன்று காலை: 28 தமிழர்கள் உட்பட 323 பேர் டெல்லி வந்தனர்: இதுவரை 81 தமிழர் உட்பட 654 பேர் மீட்பு: சீனாவில் வைரஸ் பலி 304 ஆக அதிகரிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]