இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

இளம்பெண்ணை குத்திக் கொன்ற 4 பேருக்கு ஆயுள்தண்டனை

11/12/2025 3:30:09 PM
திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

தூத்துக்குடி: இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு தூத்துக்குடி மகிளா கோர்ட் ஆயுள் சிறை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அடுத்த வில்லிசேரி, நடுக்காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் தங்கபாண்டி (35). இவரது மனைவி கற்பகம் (32). தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள். இந்நிலையில் தங்கபாண்டியன் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் எனக்கூறி கற்பகத்தை கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் தனது மூத்த சகோதரியின் மகளை 2ம் தாரமாக திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டார்.

இதற்காக தங்கபாண்டி அவரது அண்ணன் தங்கமாரிமுத்து (40), தங்கை லதாசெல்வி (32), அக்கா சுப்புலட்சுமி (48) மற்றும் சுப்புலட்சுமியின் மகன் சரவணகுமார் (26) ஆகியோர் சேர்ந்து கற்பகத்தை துன்புறுத்தியதுடன் அவரது பெற்றோர் வீட்டில் இருந்து ரூ 50 ஆயிரம் வாங்கி வருமாறு கூறி வீட்டைவிட்டு துரத்தினர். இந்நிலையில் சிறிது காலம் தனது தாய் வீட்டில் இருந்த கற்பகம் கடந்த 2015ம் ஆண்டு ஆக. 2ம் தேதி மீண்டும் சேர்ந்து வாழ கணவர் தங்கபாண்டி வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், அப்போது அவர் ரூ.50 ஆயிரம் வாங்கி வரவில்லை. மேலும் அவர் திரும்ப வந்துவிட்டதால் 2ம் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கற்பகத்தின் கணவர் தங்கபாண்டி மற்றும் அவரது அண்ணன் தங்கமாரிமுத்து, தங்கை லதாசெல்வி, அக்கா சுப்புலட்சுமி மற்றும் சுப்புலட்சுமியின் மகன் சரவணகுமார் ஆகியோர் சேர்ந்து கற்பகத்தை சரமாரியாக தாக்கியதோடு கத்தியால் குத்தினர். இதில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்து படுகாயமடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து தங்கபாண்டி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கை தூத்துக்குடி மகிளா கோர்ட் நீதிபதி குமார் சரவணன் விசாரித்து வந்தார். இதனிடையே இவ்வழக்கில் ஜாமீனில் வந்த சுப்புலட்சுமியின் மகன் சரவணகுமார் தற்போது வரை தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் இவ்வழக்கில் அவரது பகுதி பிரிக்கப்பட்டுள்ளது. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள அவரை கயத்தாறு போலீசார் தேடி வருகின்றனர்.
மீதமுள்ளவர்களில் தங்கபாண்டி, அவரது அண்ணன் தங்கமாரிமுத்து, தங்கை லதாசெல்வி, அக்கா சுப்புலட்சுமி ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி குமார் சரவணன் நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும் சில
  • யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்



  • டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி



  • நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்



  • வீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது



  • வீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை



  • குமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்



  • பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து குத்திக் கொன்ற வாலிபருக்கு அடிஉதை...ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி



  • வைகை அணை 67 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை



  • கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட வீட்டில் ஒயின் தயாரித்தவர் கைது



  • ஷூட்டிங்கில் சில்மிஷம் செய்த விவகாரத்தில் நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு பிளாக் மெயில் செய்த நடிகை கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]