இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆன்லைனில் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் திடீர் போராட்டம்

10/10/2025 3:02:09 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

அண்ணாநகர்: ஆன்லைன் மூலம் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கக்கோரி கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் செயல்பட்டுவரும் நிஞ்ஜா, கார்ட் மற்றும் உடான் போன்ற தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், கோயம்பேடு மார்க்கெட்டில் உரிமம் பெறாத நபர்கள் மூலம் குடோன்கள் அமைத்து தரமற்ற மற்றும் அழுகிய காய்கறிகள், பழங்களை பாதுகாத்து சென்னை நகர மக்களுக்கு சப்ளை செய்து வருகின்றன. இதனால் தரமான காய்கறிகளை விற்பனை செய்யும் உரிமம் பெற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், சென்னை நகரில் ஆன்லைன் நிறுவனங்களின் அழுகிய காய்கறி சப்ளையை தடை செய்ய வலியுறுத்தி கோயம்பேடு மார்க்கெட் சாலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் காய்கறி வணிகர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் ராஜசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைனில் காய்கறிகளை பதிவு செய்தவர்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை வியாபாரிகள் சிறைப் பிடித்தனர். அதில் அழுகிய காய்கறிகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் கோயம்பேடு வணிக வளாக நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் நிர்வாக அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவரிடம் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் கூறுகையில், ‘’சென்னை நகரில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு நாளைக்கு 20 வாகனங்கள் மூலம் மக்களுக்கு தரமற்ற காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தரமான காய்கறிகளை விற்பனை செய்யும் உரிமம்பெற்ற வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தரமற்ற காய்கறிகளை விற்பனை செய்யும் குடோன்களை மூடவேண்டும்’’ என்றார். ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் ஆன்லைன் நிறுவனங்களுக்கு காய்கறி சப்ளையை தடை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’’ என நிர்வாக அதிகாரி உறுதி அளித்தார்.இதை ஏற்று அனைத்து வியாபாரிகளும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் சில
  • தமிழகத்தில் 18 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்



  • அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் வணிகவளாகம் கட்டுவதற்காக ஓடைக்கால்வாய் ஆக்கிரமிப்பு



  • தமிழகத்தில் முதன் முறை கைத்தறி போர்வை விற்பனையை அதிகரிக்க நடமாடும் அரசு பஸ்



  • கர்நாடக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் ஆரம்பம்



  • பிளஸ்2 மாணவி எரித்து கொலை தீ குளித்து வாலிபர் தற்கொலை



  • மத்திய அரசை எதிர்க்கும் அளவிற்கு தமிழக அரசுக்கு முதுகெலும்பு கிடையாது: பிரசாரத்தில் வைகோ பேச்சு



  • பம்மல் பிரதான சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார்: வாலிபர் காயம்; டிரைவருக்கு சரமாரி அடி



  • 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு



  • உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு கோவையில் சொகுசு பங்களா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]