இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆயுத பூஜை தொடர் விடுமுறை எதிரொலி : கோயம்பேட்டிலிருந்து இன்று 2,990 பஸ்கள் இயக்கம்

10/5/2025 2:46:53 PM
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு : இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி? மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு விக்கிரவாண்டி, நாங்குநேரியையும் சேர்த்து 3 தொகுதிகளில் திமுக வெற்றி செய்தி : மு.க.ஸ்டாலின் உறுதி


சென்னை- ஆயுதபூஜை தொடர் விடுமுறையின் காரணமாக அரசு பஸ்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றனர். இன்று சென்னை கேயம்பேட்டிலிருந்து 2,990 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தமிழகத்தில் தலைநகராக இருக்கும் சென்னையில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கியுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி, விருதுநகர், மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஏராளாமானோர் வசிக்கின்றனர். இவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்தக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாணவர்கள் இங்கு தங்கி, தங்கள் மேல்படிப்பை தொடர்ந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஏராளமானோர் சென்னையில், அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், ஆயுதபூஜை தொடர் விடுமுறை மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட விஷேச தினங்களில், சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்தநிலையில் வரும், 7ம் தேதி ஆயுத பூஜை வருகிறது. இதற்கு முந்தை நாட்கள் வார இறுதி நாட்களாக என்பதால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதையொட்டி பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் தங்கியுள்ள மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று, விடுமுறையை கழிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக அவர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே, நேற்று இரவு பயணிக்கும் வகையில் ரயில், பஸ்களில் டிக்கட் முன்பதிவு செயதனர். இதனால் விடுமுறைக்கு முன்னரும், பின்னரும் அனைத்து ரயில்களிலும் டிக்கட்கள் விற்று தீர்ந்தன. இதையடுத்து அரசு மற்றும் தனியார் பஸ்களின் பலர் முன்பதிவு செய்தனர். மேலும் சிலர் முன்பதிவு செய்யாமலும் நேரடியாக சென்றும் பயணித்தனர்.இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ேநற்று வழக்கமாக இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் சேர்த்து சிறப்பு பேருந்துகள் 930 என மொத்தம் 3,155 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்ததாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் சேரத்து 765 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 2,990 பஸ்கள் இயக்கப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கும் மொத்தமாக சேர்த்து வழக்கமாக இயக்கப்படும் 4,450 பஸ்களுடன் சேர்த்து 1,695 பஸ்கள் என மொததம் 6,145 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிகப்படியான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கோயம்பேடு, மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி, தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், தாம்பரம் மாநகர் போக்குவரத்துக்கழக ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், கே.கே.நகர் பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு தீவிரம்

கனரக வாகனங்கள் சென்னை சிட்டிக்குள் வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாறாக அவை பைபாஸ் சாலையில் இயக்கப்படுகின்றன. பஸ், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பஸ் ஸ்டாண்டுகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். அவர்கள் சந்தேகப்படும் வகையில் சுற்றுவோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பயணிகளிடத்தில் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சில
  • உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு : இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி? மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு



  • விக்கிரவாண்டி, நாங்குநேரியையும் சேர்த்து 3 தொகுதிகளில் திமுக வெற்றி செய்தி : மு.க.ஸ்டாலின் உறுதி



  • பால் விலை உயர்வை தொடர்ந்து புதிய மின் இணைப்பு கட்டணம் கடும் உயர்வு; தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு



  • 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை ‘ஆம்னி’ பஸ்களில் கட்டணம் கடும் உயர்வு ; போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு குழு



  • பிரதமர் மோடி மாமல்லபுரம் வருகை எதிரொலி: இபிஎஸ், ஓபிஎஸ் 10 மாவட்ட செயலாளருடன் ஆலோசனை..சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு



  • அஜினமோட்டோவுக்கு தமிழகத்தில் தடை: அமைச்சர் கருப்பணன் அறிவிப்பு



  • தமிழகத்தில் முதுகெலும்பில்லாத ஆட்சி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு



  • திருப்பதி கோயில் பிரம்மோற்சவ 4ம் நாள்: கல்பவிருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி



  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி கோயிலை தமிழக அரசு ஏற்று நடத்தும்: அமைச்சர் கருப்பணன் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]