இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

போக்குவரத்து விதிகளை மீறினால் 10 மடங்கு அபராதம்: விதிமீறும் எம்பி, எம்எல்ஏவிடம் இருமடங்கு வசூல்...மத்திய அரசு அதிரடி

6/26/2019 2:42:18 PM
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்

புதுடெல்லி: மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன மசோதாவின்படி, போக்குவரத்து விதிகளை மீறினால் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும். அதேபோல், ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால், ரூ.10,000 அபராதமும், விதிமீறும் எம்பி, எம்எல்ஏக்களுக்கு இருமடங்கு அபராதம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க பரிந்துரைக்கும் மோட்டார் வாகன (திருத்த) மசோதாவுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இந்த திருத்தப்பட்ட மசோதாவில், பழைய அபராதக் கட்டணத்தைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக வசூல் செய்வதற்கு வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா காலாவதியாகிய நிலையில், அதனை மீண்டும் மத்திய அரசு புதுப்பித்திருந்தது. இந்த மசோதா 16ம் மக்களவை கூட்டத்திலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது.  இருப்பினும், மாநிலங்களவை ஒப்புதல் பெறாத காரணத்தால், அது இத்தனை நாட்களாக நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த புதிய மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய விதியானது நாட்டின் தற்போதைய போக்குவரத்து முறையை மாற்றியமைக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. புதிய மசோதாவில் குறிப்பிடப்பட்ட விதிகளின்படி, போக்குவரத்து விதிமீறல்களான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குதல், குடித்துவிட்டு வாகனத்தை இயக்குதல், அதிகவேகமாக வாகனத்தை இயக்குதல், ரேஷ் டிரைவிங், சிறுவர்கள் வாகன ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களைக் கடுமையாக கண்டிக்கும் வகையில், உச்சபட்ச அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அதாவது, அவசரகால வாகனங்களுக்கு, அதாவது ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு போன்று வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றால், அந்த வாகன ஓட்டிக்கு ரூ.10 ஆயிரம் வரை விதிக்கப்படும். அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். அதிவேக பயணத்திற்கு ரூ.1,000 முதல் ரூ. 2,000 வரை அபராதம் செலுத்த வேண்டும்.

வாகனத்திற்கு உரிய காப்பீடு இல்லையென்றால் ரூ. 2,000 அபராதம் வசூலிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கினால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். இத்துடன், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அல்லது ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டினால், 1,000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாகவும் இருந்தது. தற்போது புதிய மசோதாவின்படி, குடிபோதையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டினால் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும். சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால், அந்த வாகனத்தின் உரிமையாளர் அல்லது சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கப்படும். போக்குவரத்து சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் தவறு ெசய்தால், இருமடங்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும், வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும். அந்தவகையில், 3 சிறைத்தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டு வரும் அபராதத் தொகையை காட்டிலும், பத்து மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  மேலும், புதிய மசோதா விதிகளின்படி, விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மக்களால் தேர்வு செய்யப்படும் எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்படும் மேயர், நகராட்சி சேர்மன், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் விதி மீறலில் ஈடுபட்டால், 2 மடங்கு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • அனைத்து நாணயங்களும் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • ஏழுமலையான் கோயிலில் ரூ4.19 கோடி காணிக்கை



  • டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேலும் 104 கிணறுக்கு அனுமதி கோரி விண்ணப்பம்: ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசிடம் முறையீடு



  • பஸ் நிலையத்தில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்கார முயற்சி: போலீஸ்காரர் அதிரடி சஸ்பெண்ட்



  • கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடுவால் கட்டப்பட்ட ‘பிரஜா வேதிகா’ அரண்மனை கட்டிடம் இடிப்பு: பாதுகாப்பு வாபஸ்சை தொடர்ந்து அடுத்த நடவடிக்கை



  • தங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது



  • கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்



  • பொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகருக்கு அபராதம்



  • ஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி



  • கேரள மாநிலத்தில் கெடுபிடி மாவோயிஸ்ட்கள் கோவைக்கு இடம் பெயர்வு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]