இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அமைச்சர், உதவியாளர் வீடுகளில் 2வது நாளாக சோதனை நீடிப்பு : முக்கிய ஆவணங்கள் சிக்கின

2/22/2019 2:45:17 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

வேலூர் : 300 கோடி மதிப்புள்ள நில பேர விவகாரம் தொடர்பாக அமைச்சர் கே.சி.வீரமணி வீடு, அவரது உதவியாளர் வீடு, தொழிலதிபர் மற்றும் நண்பர்கள், உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள், கோடிக்கணக்கான பணபரிவர்த்தனை செய்யப்பட்டதற்கான வங்கி புத்தகங்கள் சிக்கி உள்ளது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாய் சிட்டி சென்டர் என்ற பெயரில் இயங்கும் 300 கோடி மதிப்பிலான நில விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு இருப்பதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபர்களான ராமமூர்த்தியும், ஜெயப்பிரகாசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் வீரமணியும் சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். 300 கோடி பண பரிவர்த்தனை முறைகேடாக பயன்படுத்துவதும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக வருமான வரித்துறை தலைமை இடமான டெல்லிக்கு புகார் சென்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டியில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டிலும், ஜோலார்பேட்டை-நாட்றம்பள்ளி சாலையில் உள்ள அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம், அமைச்சரின் 2வது மனைவி பத்மாசினி வீடு ஆகிய இடங்களில் அதிகாரிகள் நேற்று காலையில் சோதனையை தொடங்கினர். தொடர்ந்து திருமண மண்டப கணக்காளர் சத்தியமூர்த்தி வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

6 பேர் கொண்ட மற்றொரு குழுவினர் ஜோலார்பேட்டை சோலையூர் அருகே விவசாய நிலத்தில் வசித்து வரும் அதிமுக நகர செயலாளரும், அமைச்சரின் நேர்முக உதவியாளருமான எஸ்.பி.சீனிவாசன்(45) வீட்டில் சோதனை நடத்தினர். இங்கு இன்று அதிகாலை 2 மணி வரை நடத்த சோதனையில் ஆவணங்கள், வங்கி புத்தகங்களும், ஏராளமான வீட்டுமனை பத்திரங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சீனிவாசன் மற்றும் அவரது மனைவியிடமும் அதிகாரிகள் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். அதேபோல், காட்பாடி காந்தி நகர் விவேகானந்தர் நகரை சேர்ந்த அதிபரும் ரியல் எஸ்டேட் அதிபருமான ராமமூர்த்தியின் வீட்டில் நேற்று காலை தொடங்கிய சோதனை இன்று 2வது நாளாக நடந்து வருகிறது. இவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களுடன் ஒரு குழுவினர் நேற்றிரவு புறப்பட்டு சென்றனர்.  இருப்பினும்  மற்றொரு குழுவினர் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது தம்பி மோகன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமூர்த்தியின் நண்பரும் தொழிலதிபருமான காட்பாடி கோபாலரத்தினம் நகரில் உள்ள ஜெயப்பிரகாஷ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ராமமூர்த்தியின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த ஆவணங்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து இன்று காலை வரை இங்கும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர காட்பாடி தாலுகா கே.வி.குப்பம் ரூசா டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் சிவக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஆதரவளராகவும், ரூ.300 கோடி நில விவகாரகத்தில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது. அங்கும் இன்று காலை வரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரத்தை கடந்தும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். காட்பாடி, வேலூர், கே.வி.குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் சோதனைகள் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து ஆணவங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. அளவுக்கு அதிகமாக பண பரிவர்த்தனை நடத்துவதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. மேலும் கோடிக்கணக்கான பணபரிவர்த்தனை நடந்ததற்கான வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பணம் எப்படி வந்தது. யார் யாரிடம் பெறப்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வங்கிகளுக்கு அழைத்து சென்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முறையாக அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தி உள்ளார்களா? அல்லது மதிப்பீட்டை குறைத்து பணத்தை செலுத்தி உள்ளார்களா? என்பது குறித்து ஆணவங்களை ஆய்வு செய்யும் பணியில் வருமானவரித்துறை தணிக்கை குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை முடிந்தவுடன் இதுகுறித்து முழு விவரங்களும் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து பத்திரிக்கை செய்தியாக அனுப்பப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் சில
  • பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்



  • பாஜ கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தம்பிதுரை இப்போது பல்டி அடித்தது ஏன்?: பரபரப்பு தகவல்கள்



  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக அலுவலகத்தில் மோடி படம்: தொண்டர்கள் அதிர்ச்சி



  • ஜெ.வை விட சிறப்பாக ஆட்சி செய்கிறார் எடப்பாடி: சூலூர் எம்எல்ஏ கருத்து: அதிமுகவினர் கொந்தளிப்பு



  • சென்டர் மீடியனில் மோதி பஸ்சில் பாய்ந்தது கார் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி: மேல்மருவத்தூர் அருகே பரிதாபம்



  • மணமக்களை வாழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின்: கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்பு



  • அதிமுக எம்பி விபத்தில் பலி: திண்டிவனத்தில் பயங்கரம்



  • கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் : பிஎஸ்என்எல் தொழிற்சங்கம் எச்சரிக்கை



  • தொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]