வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது
2/21/2019 2:28:52 PM
வேளச்சேரி: வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரம் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (70). இவரது வீட்டில் பாரதி நகரைச் சேர்ந்த முத்துலட்சுமி (40) வீட்டுவேலை செய்து வந்தார். கடந்த 18ம் தேதி முத்துலட்சுமி வீட்டை பெருக்கி சுத்தம் செய்துள்ளார். அன்றைய தினம் மாலை பீரோவை நாகராஜ் திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த செயின், மோதிரம் உள்பட 8 சவரன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேளச்சேரி போலீசில் நாகராஜ் புகார் கொடுத்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலைக்கார பெண் முத்துலட்சுமியை பிடித்து விசாரித்தபோது நாகராஜ் வீட்டில் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து 8 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். முத்துலட்சுமியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.