இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் 2வது முறையாக ஆஜர்

1/11/2025 4:32:45 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் 2வது முறையாக ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 2012ம் ஆண்டு டிசம்பர் முதல் 2014ம் ஆண்டு மார்ச் வரை தலைமை செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் பணியாற்றினார். பின்னர் ஓய்வு பெற்ற பிறகு தமிழக அரசின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகவும் காணப்பட்டார். இந்த நிலையில், விசாரணை ஆணையத்தில் கடந்த டிசம்பர் 20ம் தேதி ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜர் ஆனார். அன்றைய தினம் ஆறுமுகசாமி விசாரணையில், ஜெயலலிதாவை அவர் சந்தித்தது குறித்தும் மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது அரசு தொடர்பான விவகாரங்களில் ஆலோசனை நடத்தினாரா உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் ஷீலா பாலகிருஷ்ணன் தனது தரப்பு பதில்களையும் விளக்கங்களையும் எடுத்து கூறினார்.

இதையடுத்து, மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த 5ம் தேதி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை 9.50 மணியளவில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜர் ஆனார். நீதிபதி ஆறுமுகசாமி 10.11 மணியளவில் விசாரணை ஆணையத்திற்கு வந்தார். அவரிடம் 2ம் கட்டமாக இன்று தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா உடன் இருந்தவர்களில் முக்கியமானவராக இருப்பவர் ஷீலா பாலகிருஷ்ணன். எனவே, அவரிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை கேட்டார். அதற்கு ஷீலா பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். இவருடைய விசாரணையை தொடர்ந்து நாளை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை இதய சிகிச்சை மருத்துவர் சுவாமிநாதன் ஆணையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க உள்ளார்.

மேலும் சில
  • ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி



  • கோயில் நிலத்தில் தங்கப் புதையல்? ஐம்பொன் சிலை, நவரத்தின கற்கள் மீட்பு



  • ஆர்டிஓ அதிகாரிகளுக்கு தர இருந்த மாமூல் பணம் ரூ.2.77 லட்சம் பறிமுதல்: விஜிலென்ஸ் அதிரடி நடவடிக்கை



  • லாட்ஜில் அழகியுடன் டிஎஸ்பி கும்மாளம்?: எஸ்பி விசாரணை



  • ஜெ. மர்ம மரணம் விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர் சாமிநாதன் ஆஜர்: சசிகலாவின் வக்கீலும் ஆஜராகி விளக்கமளிக்கிறார்



  • ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து: அரசு பஸ்கள் இன்று காலை முதல் இயங்கின



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது



  • வைரமுத்து விவகாரம் பாஜவினர் கண்ணியம் காக்க வேண்டும்: இல.கணேசன் எம்பி பேட்டி



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு



  • இஸ்ரோவின் 100வது செயற்கைகோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]