இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஜனாதிபதி ராம்நாத் தமிழகம் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்

12/23/2017 6:01:08 PM
இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி குஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றார் : பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து

சென்னை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ராமேஸ்வரம் வந்தார். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்த அவர், பின்னர் பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தை பார்வையிட்டார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு 12 எஸ்பிக்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீசாருடன் ராமேஸ்வரத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், 10.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மதுரை கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மதுரையில் இருந்து ஜனாதிபதியும், கவர்னரும் ராமேஸ்வரம் சென்றனர். அங்கு ராமநாதசுவாமி கோயிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ராமேஸ்வரம் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த ஜனாதிபதி, பகல் 1.25 மணிக்கு பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்திற்கு சென்று, அஞ்சலி செலுத்தினார்.

பின்பு மதியம் 2 மணிக்கு ஜனாதிபதியும், கவர்னரும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை சென்றனர். ஜனாதிபதி வருகையையொட்டி மண்டபம் முதல் ராமேஸ்வரம் கோயில் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 12 எஸ்.பி.க்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமநாதசுவாமி கோயில், அப்துல்கலாம் நினைவிடம், மண்டபம் ஹெலிபேடு தளம் ஆகியவற்றில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் சோதனையிட்டனர். ஜனாதிபதி வருகையை தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து இன்று மாலை வரை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது. இந்தநிலையில், மதுரையில் இருந்து மாலை 3.30 மணிக்கு தனி விமானத்தில் ஜனாதிபதி சென்னை புறப்பட்டார். மாலை 4.35 மணிக்கு சென்னை வந்ததும் ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் மாலை 4.50 மணிக்கு காரில் கிண்டி கவர்னர் மாளிகைக்கு வந்தடைந்தார். மாலை 5.45 மணிக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். பின்னர் மாலை 6.35 மணிக்கு மீண்டும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார். பின்னர் நாளை (24ம் தேதி) காலை 9.30 மணியில் இருந்து 10 மணி வரை கிண்டி கவர்னர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். அதன் பின்னர் காரில் புறப்பட்டு 10.15 மணிக்கு பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு வழியனுப்பும் நிகழ்ச்சி முடிந்ததும், 10.25 மணிக்கு தனி விமானத்தில் ஐதராபாத்துக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பழைய விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து ஜனாதிபதிக்கான சிறப்பு பாதுகாப்பு படையினரும் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

மேலும் சில
  • சுனாமி 13ம் ஆண்டு நினைவு தினம் : கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி



  • மூன்றரை யூனிட் மணல் ரூ.40 ஆயிரம் : கட்டிட பணி முற்றிலும் முடங்கும் அபாயம்



  • நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை நோக்கிய வகுப்புகளால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கிறது



  • ஆர்.கே.நகர் தோல்வியால் அதிமுக அழிந்து விடாது



  • ஜிஎஸ்டியால் சம்பளம் குறைப்பு எதிரொலி : திண்டுக்கல்லில் 10 ஆயிரம் நெசவாளர்கள் ஸ்டிரைக்



  • ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு இன்று கேரளா வருகை



  • புழல் சுடுகாட்டில் பரபரப்பு : வங்கி ஏடிஎம் கார்டுகள், பாஸ்புக் எரிப்பு



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் டோக்கன் வழங்காத தகராறில் கூலி தொழிலாளிக்கு சரமாரி அடிஉதை



  • இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி



  • பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர் கூட்டத்தில் பஸ் புகுந்தது 6 பேர் உடல் நசுங்கி சாவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]