கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 4ம் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
12/22/2017 3:27:52 PM
ஊட்டி: ேகாடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகள் அனைவரும் ஜனவரி 4ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகிேயாருக்கு சொந்தமானது. கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி இரவு கோடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைந்த 11 பேர் கொண்ட கும்பல், அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின், பங்களாவிற்குள் சென்று, பல்வேறு சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், சந்தோஷ்சாமி, தீபு, சதீஷன், உதயகுமார், மனோஜ், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், ஜம்ஷீர் அலி உட்பட 10 பேர் மீது கோத்தகிரி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில், நேற்று 10 பேரையும் ஆஜர்படுத்தும்படி கோத்தகிரி நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டிருந்தார். அவர்கள் 10 பேரும் நேற்று கோத்தகிரி ேகார்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின், இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வரும் ஜனவரி 4ம் தேதி குற்றவாளிகள் 10 பேரும் மாட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜித்தின் ஜாய் மற்றும் ஜம்சீர் அலி ஆகியோர் பாதுகாப்பாக மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.