இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு வரக்காரணம் என்ன?: அரசு டாக்டரிடம் நீதிபதி சரமாரி கேள்வி

12/22/2017 3:26:02 PM
இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி குஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றார் : பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து

சென்னை: ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு வரக்காரணம் என்ன என்று அரசு டாக்டரிடம் விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகச்சாமி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் மூலம் இதுவரை 28 பிரமாண பத்திரங்களும், 422 புகார் மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில், திமுக மருத்துவர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், ஜெயலலிதா ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். இவர்கள் பல்வேறு தகவல்களை நீதிபதியிடம் தெரிவித்தனர். குறிப்பாக, ஜெயலலிதா உறவினர்கள் அனைவரும் அவரது மரணத்தில் தங்களுக்கும் சந்தேகம் இருக்கிறது என்று நீதிபதியிடம் தெரிவித்தனர். இதற்கு போயஸ்கார்டனில் உள்ள ஊழியர்களை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவில் இடம் பெற்ற டாக்டர்கள் பாலாஜி, முத்துசெல்வன், தர்மராஜ், கலா, டீன் நாராயணபாபு, முன்னாள் மருத்துவ கல்வி இயக்குனர் விமலா உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதில், டாக்டர் பாலாஜி மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவரிடம் சிகிச்சை அளித்த டாக்டர்களை அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார். அவர் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக வரும் 27ம் தேதி அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி கார்டியாக் அரெஸ்ட்(மாரடைப்பு) காரணமாக சாதாரண வார்டில் இருந்து மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அப்போது, அவருக்கு இருதய சிகிச்சை துறை பிரிவு டாக்டர் தினேஷ் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

எனவே, அவரிடம் விசாரணை நடத்த நீதிபதி முடிவு செய்தார். இதற்காக, அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிபதி சம்மன் அனுப்பினார். இந்த நிலையில், அவர் இன்று காலை 10 மணியளவில் நீதிபதி முன்பு ஆஜரானார். அவரிடம் நீதிபதி, ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெக்ஸ்ட் எப்போது வந்தது. அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது. எத்தனை டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்?, ஜெயலலிதா உயிர் எப்போது பிரிந்தது, திடீரென அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் வரக்காரணம் என்ன? என்று சரமாரி கேள்வி எழுப்பினார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் டாக்டர் தினேஷ் உரிய விளக்கம் அளித்தார். அவரது வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

மேலும் சில
  • சுனாமி 13ம் ஆண்டு நினைவு தினம் : கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி



  • மூன்றரை யூனிட் மணல் ரூ.40 ஆயிரம் : கட்டிட பணி முற்றிலும் முடங்கும் அபாயம்



  • நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை நோக்கிய வகுப்புகளால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கிறது



  • ஆர்.கே.நகர் தோல்வியால் அதிமுக அழிந்து விடாது



  • ஜிஎஸ்டியால் சம்பளம் குறைப்பு எதிரொலி : திண்டுக்கல்லில் 10 ஆயிரம் நெசவாளர்கள் ஸ்டிரைக்



  • ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு இன்று கேரளா வருகை



  • புழல் சுடுகாட்டில் பரபரப்பு : வங்கி ஏடிஎம் கார்டுகள், பாஸ்புக் எரிப்பு



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் டோக்கன் வழங்காத தகராறில் கூலி தொழிலாளிக்கு சரமாரி அடிஉதை



  • இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி



  • பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர் கூட்டத்தில் பஸ் புகுந்தது 6 பேர் உடல் நசுங்கி சாவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]