டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
10/13/2017 3:36:15 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் பணியை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முதல்வர் உத்தரவுபடி அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு பணியை கண்காணிப்பதற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசுவை உற்பத்தி செய்த வணிக நிறுவனங்களிடம் ரூ.1 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழுவை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது. அவர்களின் ஆலோசனை பெற்று தமிழகத்தில் டெங்கு கட்டுக்குள் கொண்டு வரப்படும். மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை 24 மணிரேமும் கண்காணிப்பில் வைத்திருந்து சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.