இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஊதிய உயர்வு கோரி காட்டாங்கொளத்தூரில் 3வது நாள் போராட்டம் தனியார் மருத்துவமனை நர்ஸ்கள் கைகளை பிடித்து இழுத்து தனி அறையில் சரமாரி தாக்கு

10/13/2017 3:35:00 PM
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நர்ஸ்கள் இன்று 3வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நர்ஸ்களை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூரில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு பணியாற்றும், 500க்கும் மேற்பட்ட நர்சுகளுக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்புபடி ஊதிய உயர்வை வழங்கவில்லை. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்புபடி சம்பளம் வழங்க கோரி மருத்துவமனையின் நுழைவாயில் முன் அமர்ந்து நேற்று முன்தினம் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மறைமலைநகர் போலீசார், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை. நேற்று 2வது நாளாக மருத்துவமனை முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து நர்சுகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 3வது நாளாக இன்று மருத்துவமனை முன்பு நர்ஸ்களின் போராட்டம் தொடர்ந்தது. மருத்துவமனை டீன் சுந்தரம், மருத்துவமனை கண்காணிப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘மற்ற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் ஊதியம் வழங்கப்படும். உடனடியாக பணிக்கு திரும்புங்கள்’ என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாதிபேர் பணிக்கு செல்ல ஒப்பு கொண்டனர். ஆனால் பாதி நர்ஸ்கள் எதிர்ப்பு தெரிவித்து, ‘ஒவ்வொரு முறையும் இப்படிதான் சொல்கிறீர்கள், முதலில் சம்பளத்தை கொடுங்கள், அதற்கு பிறகு வேலைக்கு செல்கிறோம்’ என்றனர்.

அந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டிகள், நித்யா என்ற நர்சின் கையை பிடித்து இழுத்து தனி அறையில் சரமாரியாக தாக்கினர். இதை தட்டி கேட்ட நவீன் என்ற நர்சையும் தாக்கினர். இதனால் அனைத்து நர்சுகளும் ஆவேசம் அடைந்தனர். ஏற்கனவே பணிக்கு செல்வதாக கூறிய நர்ஸ்கள் உள்பட அனைவரும் மருத்துவமனை நுழைவாயில் முன்பு திரண்டு நிர்வாகத்துக்கு எதிராகவும், செக்யூரிட்டிகளை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வண்டலூர் டிஎஸ்பி அண்ணாதுைர, மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நர்ஸ்கள் கூறுகையில், ‘எங்கள் கூட்டமைப்பின் வழிகாட்டுதல்படி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நியாயமாக போராடும் எங்களை நிர்வாகம் மிரட்டுகிறது. செக்யூரிட்டிகளை வைத்து அடித்து உதைக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஊதிய உயர்வு மற்றும் செக்யூரிட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்’ என்றனர். இதற்கிடையில் இங்கு பணியாறும் நர்ஸ்களில் பலர் வெளியூரை சேர்ந்தவர்கள். அவர்கள் மருத்துவமனை விடுதியில் தங்கியுள்ளனர். நேற்று நள்ளிரவு 11 மணியளவில் பெண்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற செக்யூரிட்டிகள், ‘போராட்டம் நடத்தினால் விடுதியை பூட்டி விட்டு உங்களது உடமைகளை தூக்கி வெளியே வீசி விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர். அதேபோன்று ஆண் நர்ஸ்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற செக்யூரிட்டிகள், ‘நீங்களும் போராட்டம் செய்ய கூடாது, அப்படி போராடினால் வெளியே விரட்டி விடுவோம்’ என்று மிரட்டி விட்டு விடுதி அறையில் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை



  • டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு



  • தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் தமிழக அரசு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்



  • புதுகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : 190 கோடி நல உதவிகள் முதல்வர் வழங்குகிறார்



  • கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் கருகி பலி



  • வரும் நவம்பர் மாதத்துக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: செங்கோட்டையன் தகவல்



  • தமிழக காங்கிரஸ் தலைவர் யார்?: ராகுல்காந்தியுடன், திருநாவுக்கரசர் இன்று சந்திப்பு



  • டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி



  • சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் கூடாது குறைந்த விலையில் தின்பண்டம்: அரசிடம் வலியுறுத்த விஷால் முடிவு



  • துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி பதவிகளுக்கான குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது: 85 பதவிக்கு 4199 பேர் போட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]