ரோஹிங்கியா விவகாரம் வங்கதேச எல்லையில் கூடுதல் கண்காணிப்பு
10/6/2025 3:02:26 PM
கொல்கத்தா: ரோஹிகிங்யா முஸ்லிம்கள், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவதை தடுக்க, வங்கதேச எல்லையில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ராணுவத்தின் தாக்குதலையடுத்து, அங்கு வசித்த ரோஹிங்யா முஸ்லிம்கள், இந்தியா, வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். ரோஹிகிங்யா முஸ்லிம்கள் குடியேறியுள்ளது, சட்ட விரோதம் என தெரிவித்துள்ள மத்திய அரசு, அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும்படி, மியான்மர் அரசை வலியுறுத்தி வருகிறது. ரோஹிங்கியா முஸ்லிம்களை நாடு கடத்தும் இந்தியாவின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, ரோஹிங்கியா முஸ்லிம்களால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இந்தியாவில் உள்ள வளங்கள் மீது ஏற்கனவே அழுத்தம் உள்ள நிலையில் அதன் மீது கூடுதல் சுமை ஏற்ற அனுமதிக்க முடியாது என கூறியுள்ளது. இதில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. இதற்கிடையில் மியான்மரிலிருந்து வங்க தேசம் வழியாக மேற்கு வங்கத்துக்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக ஊடுருவதை தடுக்கும் வகையில் மேற்கு வங்கத்தில், வங்க தேச எல்லைப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு மையங்களை, எல்லை பாதுகாப்பு படையினர் அமைத்துஉள்ளனர். மேலும் ேராந்து பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.