இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இரட்டை இலை சின்னத்தை மீட்க ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு தலைவர்கள் டெல்லி பயணம்

9/18/2017 3:50:00 PM
பொதுக்கூட்டங்களில் காரசாரம், மோதல் எங்களை சீண்டினால் போலீசாரின் சட்டையை கழற்றி விடுவேன்: அதிமுக மாஜி எம்எல்ஏ பேச்சு ராணுவம் அதிரடி காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை: வங்கி மீது குண்டுவீச்சு: 4 பேர் படுகாயம்

சென்னை : இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளிக்கின்றனர். அதிமுக எடப்பாடி, ஓ.பி.எஸ் அணி என செயல்பட்ட போது இரண்டு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை பெற முற்பட்டனர். இதனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயரை முடக்கி வைத்தது. எடப்பாடி அணிக்கு அதிமுக(அம்மா), ஓ.பி.எஸ். அணிக்கு(புரட்சி தலைவி அம்மா) என்று பெயர் ஒதுக்கப்பட்டது. இருந்த போதிலும் இரண்டு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை பெற லட்சக்கணக்கில் போட்டி போட்டு ஆவணங்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இரண்டு அணிகளும் கடந்த மாதம் 21ம் தேதி இணைந்தன. அணிகள் இணைந்ததை தொடர்ந்து இரட்ைட இலை சின்னத்தை மீட்கும் முயற்சியில் தற்ேபாது ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கடந்த 12ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. அதில் அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொது செயலாளராக ஜெயலலிதா இருந்த இடத்தில் யாரும் இனி நியமிக்கப்பட மாட்டார்கள். கட்சியை ஒருங்கிணைப்பு குழு வழிநடத்தும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று காலை 10.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். காலையில் தம்பித்துரை டெல்லி புறப்பட்டு சென்றார். இவர்கள் அனைவரும் இணைந்து இன்று பிற்பகலில் தேர்தல் ஆணையரை சந்திக்கின்றனர். அப்போது இரண்டு அணிகளும் இணைந்ததற்காக ஆவணங்களை தாக்கல் செய்கின்றனர். மேலும் இரண்டு அணிகளும் தனித்தனியாக இரட்டை இலை சின்னத்தை மீட்க கொடுத்த ஆவணங்களையும், பொது செயலாளர் சசிகலா தான் என்பதற்காக கொடுத்த ஆவணங்களையும் திரும்ப பெறுகின்றனர். மேலும் பொது செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானத்தையும் அவர்கள் அளிக்க உள்ளனர்.

தேர்தல் ஆணையம் ஆதாரங்களை ஆய்வு செய்து அதன் பிறகு இரட்ைட இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து முடிவு செய்யும். எடப்பாடி, ஓ.பி.எஸ். அணியினர் தேர்தல் ஆணையரை சந்திப்பது டி.டி.வி.தினகரன் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்னரே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை விமானநிலையத்தில் நிருபர்களிடம் பேசிய ஜெயக்குமார், ‘‘தாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம். இப்போது முழுக்க முழுக்க அரசு முறை பயணமாகவே செல்கிறேன். அது எதற்காக என்று சொல்ல முடியாது. டிடிவி தினகரன் கூறுவதற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது’’ என்றார்.

மேலும் சில
  • பொதுக்கூட்டங்களில் காரசாரம், மோதல் எங்களை சீண்டினால் போலீசாரின் சட்டையை கழற்றி விடுவேன்: அதிமுக மாஜி எம்எல்ஏ பேச்சு



  • கரூரில் 4வது நாளாக ஐடி ரெய்டு நீடிப்பு செந்தில் பாலாஜி நண்பர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்: நிதி நிறுவனத்துக்கு சீல்



  • அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய்



  • செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் ரெய்டு எதிரொலி டிடிவி தினகரன் ஆதரவு எம்பி, எம்எல்ஏக்கள் பீதி: வருமானவரித்துறையும் ஆவணங்களை சேகரிப்பதாக தகவல்



  • அரசு தரப்பில் அழைப்பு இல்லாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்: இன்று மாலை முடிவு



  • டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த தென்காசி தொகுதி அதிமுக எம்பி முதல்வர் எடப்பாடி அணிக்கு தாவினார்



  • பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசு பரிசீலனை.



  • உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : இன்றோடு ஓராண்டு ஆகிறது



  • மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு : அப்ரூவராக மாறும் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு சிபிஐ குறி



  • சாதி, மதவாதிகள் இங்கு காலூன்றினால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது : திருமாவளவன் எச்சரிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]