இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நெல்லை அருகே அதிகாலை கோர விபத்து பஸ் மீது லாரி மோதல் 5 பேர் பரிதாப சாவு: சோகத்தில் முடிந்த ஆன்மீக பயணம்

9/16/2017 3:08:36 PM
நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி செலவில் 49 கேன்சர் மையங்கள்: மத்திய அரசு திட்டம் ஐநா கூட்டத்தில் பங்கேற்க சுஷ்மா அமெரிக்கா பயணம் : டிரம்ப் தலைமையிலான கூட்டத்திலும் பங்கேற்கிறார்

நெல்லை: நெல்லை அருகே ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்த பக்தர்கள் பஸ் மீது சிமென்ட் பாரம் ஏற்றிய லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர்.ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், தெனாலி பகுதியைச் சேர்ந்த 47 பக்தர்கள், 2 சமையல் தொழிலாளிகள் மற்றும் 2 டிரைவர்கள் என மொத்தம் 51 பேர் ஒரு சுற்றுலா பஸ்சில் ஆன்மீக சுற்றுலாவாக கடந்த 14ம் தேதி இரவு அங்கிருந்து புறப்பட்டனர்.ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு சென்ற அவர்கள் கன்னியாகுமரிக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லையை கடந்து சென்று கொண்டிருந்தனர்.

டக்கரம்மாள்புரத்தை கடந்து நாகர்கோவில் சாலையில் அரசு ஐஆர்டி பாலிடெக்னிக்கை கடந்து சிறிது தூரம் சென்றதும் இயற்கை உபாதையை கழிப்பதற்காக டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார். சிலர் பஸ்சை விட்டு இறங்கி நின்றனர். பலர் பஸ்சுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது திண்டுக்கல்லில் இருந்து மார்த்தாண்டத்திற்கு சிமென்ட் பாரம் ஏற்றிய லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. லாரியை கோவில்பட்டி இலுப்பையூரணியைச் சேர்ந்த ரசூல்ராஜா என்பவர் ஓட்டினார்.இருளில் சுற்றுலா பஸ்சும், அதிலிருந்த பயணிகள் சாலையோரமாக நின்றதையும் கடைசியாக கவனித்த லாரி டிரைவர் நிலை தடுமாறினார். இதனால் லாரி அவர்கள் மீது மோதியதுடன் சுற்றுலா பஸ் மீதும் மோதியது. இதில் பஸ்சின் பின்பகுதி நொறுங்கியது.

மேலும் சாலையில் நின்றிருந்த தெனாலி அருகே உள்ள அனந்தவீரம் என்ற பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமாலிக் மனைவி வர்த்தினி (56), நாகரத்தினம் (45) ஆகிய 2 பெண்களும், யூப்புர் பகுதியைச் சேர்ந்த மருந்துக்கடை அதிபர் வெங்கட்ராம்ராவ் (66), விவசாயி ராம்மோகன்ராவ் (70) ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.மேலும் சத்தியம் (50) உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பியோடி விட்டார்.தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயமடைந்த 7 பேரையும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரத்தில் சத்தியம் என்பவர் பரிதாபமாக இறந்தார்.

உயிர் தப்பியவர் கண்ணீர் பேட்டி
விபத்தில் உயிர் தப்பிய ராமுலு என்பவர் கூறியதாவது, 4 சிறுவர்கள் உள்பட 51 பேர் ஆன்மீக சுற்றுலாவாக கடந்த 14ம் தேதி இரவு தெனாலியிலிருந்து புறப்பட்டோம். காளகஸ்தி, காவிரி புஷ்கரணி, பழநி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வழிபாடு செய்தோம். குமரியில் சூரியோதயம் பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தோம்.அதிகாலை 4.30 மணிக்கு பஸ்சை நிறுத்தி இயற்கை உபாதையை கழிப்பதற்காக சிலர் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தோம். அப்போது வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீதும், பஸ்சின் மீதும் மோதியது.

அந்தப் பகுதி இருளாக இருந்ததால் பதற்றத்தில் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். மீட்பு வாகனங்கள் வந்து பார்த்த பின்னர் தான் 4 பேர் இறந்தது தெரியவந்தது. இந்த சோகத்திலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்பது தெரியவில்லை. நாங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல அரசும், அதிகாரிகளும் உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் சில
  • காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஏற்பாடுகள் தீவிரம்



  • அரசியல் களத்தில் வெற்றிபெற சிவபோக சக்கரத்தில் ஓபிஎஸ் வழிபாடு



  • கோவையில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் அருங்காட்சியகம் அடுத்த மாதம் திறப்பு



  • சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்



  • தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை திடீர் ரத்து : நம்பிக்கை வாக்கெடுப்பு மேலும் தாமதம் ஆகலாம்



  • இரட்டை இலை சின்னத்தை மீட்க ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு தலைவர்கள் டெல்லி பயணம்



  • உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் : ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்



  • டிடிவி அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் : சபாநாயகர் அதிரடி உத்தரவு



  • சென்னை, காஞ்சிபுரத்தில் நள்ளிரவு சூறைக்காற்றுடன் மழை தமிழகத்தில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் நாளை தமிழகம் வருகை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]