திருப்பதி அருகே இன்று அதிகாலை ₹50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
9/5/2025 3:56:19 PM
திருமலை: திருப்பதி அருகே இன்று அதிகாலை கார்களில் கடத்தப்பட்ட ₹50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து அதிகளவு செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுகிறது. இதனை தடுக்க செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வனப்பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், திருப்பதி ஆர்.சி.புரம் அருகே இன்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும் நிலையில் வேகமாக வந்த பைக் மற்றும் பின்னால் வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் பைக்கும், காரும் நிற்காமல் கார்வேட் நகரம்-பச்சிகாக்குளம் சாலையில் வேகமாக சென்றது.
இதையடுத்து கார்களை தனது வாகனத்தில் பின்தொடர்ந்த போலீஸ்காரர் கனிகராஜ், செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் மதுபாபுவுக்கு தகவல் ெதரிவித்தார். இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் ஈடுகபல்லி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வேகமாக வந்த பைக் மற்றும் கார்களை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை கண்டதும், பைக் மற்றும் கார்களை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து காரை சோதனை செய்தபோது அதில் ₹50 லட்சம் மதிப்புள்ள 1 டன் செம்மரக்கட்டைகள் கடத்தியது ெதரிய வந்தது. திருப்பதியில் இருந்து சென்னைக்கு இவை கடத்தப்பட்டதும், கார்களுக்கு முன்னால் பைக்கில் சென்றவர் பைலட்டாக சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பைக், கார்களுடன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.