புழல் அருகே பெண்ணை தள்ளிவிட்டு செயின் பறிப்பு
8/16/2017 4:18:31 PM
புழல்: சென்னை புழல் காவாங்கரை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (40). தனியார் நிறுவன ஒப்பந்ததாரர். இவரது மனைவி மாலதி (38). இவர்கள் இருவரும் தங்களது 8 மாத ஆண்குழந்தையுடன் நேற்று மதியம் மூலக்கொத்தளத்துக்கு பைக்கில் சென்றனர். பின்னர் நேற்றிரவு 8.30 மணியளவில் புழல் சைக்கிள் ஷாப் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 ஆசாமிகள், அவர்களின் பைக்கை வழிமறித்தனர். பின்னர் மாலதியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியைப் பறித்தனர். அவர்கள் இருவரையும் குழந்தையுடன் கீழே தள்ளிவிட்டு, 2 மர்ம நபர்களும் பைக்கில் தப்பி சென்றனர். அசோக்குமார் கொடுத்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.