திருத்தணியில் விஏஓ பணி நிறைவு
8/16/2017 4:17:46 PM
திருத்தணி: திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர் எம்.சுப்பிரமணி (59). இவர் தனது பணியிலிருந்து கடந்த மாதம் ஓய்வுபெற்றார். இவர், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவராகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா சங்க மாநில முதன்மை பொது செயலாளர் கி.வெங்கடேஸ்வரன் தலைமையில் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் திருமால், சிவசுப்பிரமணியம், மோகன், பார்த்திபன், நந்தன், ஜோதி பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை, திருத்தணி முருகன் கோயில் தக்கார் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு, பணி ஓய்வுபெற்ற சுப்பிரமணிக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். திருத்தணி ஆர்டிஓ ஜெயராமன், நேர்முக உதவியாளர் சீனிவாசன், திருத்தணி வட்டாட்சியர் பரணிதரன், தனி வட்டாட்சியர் பாண்டியராஜன், முன்னாள் வட்டத் தலைவர் கே.ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.