பொன்னேரி அருகே பள்ளி மாணவியிடம் செயின் பறிப்பு
8/16/2017 4:16:51 PM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த பெருஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். விவசாயி. இவரது மகள் வைஷ்ணவி (16). பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் நேற்று காலை பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டுவிட்டு, மதியம் 11.30 மணியளவில் பொன்னேரி பஜார் வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் வைஷ்ணவியை வழிமறித்தனர்.
பின்னர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றனர். இதுகுறித்து பொன்னேரி போலீசில் ஞானப்பிரகாசம் புகார் செய்தார். இப்புகாரின்பேரில் பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து, செயினை பறித்து சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.