இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கார் கடத்தல் கும்பலை கோட்டை விட்ட போலீஸ்: தகவல் பரிமாற்றத்தில் குழப்பம்

8/14/2017 3:12:54 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

அம்பத்தூர்: சென்னை வியாசர்பாடி, பி.வி.காலனி 28-வது தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (34). கார் டிரைவர். இவர் ஒரு தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் ஆன்லைன் புக்கிங்கில் வாடகைக்கு ஓட்டி வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சவாரி முடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலைய சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை சாகுல் ஹமீதை எழுப்பி, ‘மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், காரை எடுங்கள்’ என்று 3 பேர் கும்பல் கூறினர். இதற்கு சாகுல் ஹமீது எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை 3 பேரும் மிரட்டி காரை எடுக்க வைத்தனர்.

பின்னர் கொளத்தூர் அருகே சாகுல் ஹமீதை சரமாரியாக தாக்கி, காரின் பின்சீட்டில் படுக்க வைத்தனர். அவர்களில் ஒருவன் காரை ஓட்டினான். அம்பத்தூர் சிடிஎச் சாலை, திருவேங்கடம் நகர் அருகே கார் வந்தபோது, சாகுல் ஹமீதிடம் இருந்து ₹2 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 செல்போன்களை அக்கும்பல் பறித்தது. பின்னர் அவரை ஓடும் காரிலிருந்து அக்கும்பல் கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றது. அக்கம்பக்கத்தினர் சாகுல் ஹமீதை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் சாகுல் ஹமீது புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தப்பட்ட காரின் பதிவெண்ணை வைத்து, சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறை மூலமாக, அம்பத்தூரை சுற்றியுள்ள திருவேற்காடு, மதுரவாயல், திருமங்கலம், கொரட்டூர், ராஜமங்கலம், திருமுல்லைவாயல், ஆவடி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், திருவேற்காடு பகுதியில் நேற்று காலை 10.30 மணியளவில் சாலையோரமாக நின்றிருந்த காரில் ஒரு பெண்ணும் 3 வாலிபர்களும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அவ்வழியாக வந்த ரோந்து போலீசார், அங்கு காரின் அருகே சந்தேக நிலையில் நின்றிருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்களிடம் காருக்கு உரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். அவர்கள் ‘எங்களிடம் காருக்கான ஆவணம் இல்லை’ எனக் கூறியதால், அப்பெண் உட்பட 4 பேரையும் திருவேற்காடு காவல் நிலையம் கொண்டுவந்து ஒப்படைத்தனர். இதையடுத்து அப்பெண்ணிடம் காவல்நிலைய போலீசார் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு வெளியே அனுப்பினர். மீதியுள்ள 3 வாலிபர்கள் குடிபோதையில் இருந்ததால், அவர்கள்மீது சந்தேக கேஸ் பதிவு செய்துவிட்டு, அவர்களையும் வெளியே அனுப்பியுள்ளனர்.

அதன்பிறகுதான் அந்த கார் சாகுல் ஹமீதை தாக்கி கடத்தப்பட்டது திருவேற்காடு போலீசாருக்குத் தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விரைந்து வந்து, அந்த காரை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். கடத்தப்பட்ட கார் குறித்து அதிகாலை நேரத்தில் வயர்லெஸ் மைக் மூலமாக அனைத்து காவல் நிலையங்களுக்கு தகவல் தெரியப்படுத்தியும், திருவேற்காடு போலீசாரின் கவனக்குறைவால் காரை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை கோட்டை விட்டது. போலீசாருக்கு இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால்தான் கார் கடத்தல் கும்பலை போலீசார் தப்பிக்க விட்டுள்ளனர் என போலீசார் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • விசைத்தறி கடன் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விசாரணை



  • திருச்சியில் பயங்கரம்: பிளஸ் 2 மாணவன் குத்திக்கொலை



  • மீஞ்சூர் அருகே வீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை: ரூ.40 ஆயிரம் அபேஸ்



  • புழல் அருகே பெண்ணை தள்ளிவிட்டு செயின் பறிப்பு



  • பொன்னேரி அருகே பள்ளி மாணவியிடம் செயின் பறிப்பு



  • சுதந்திர தின விழாவிற்கு சென்று வீடு திரும்புகையில் கத்தி முனையில் பள்ளி மாணவி பலாத்காரம்



  • அமைச்சர்களின் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் ஆபாச வீடியோ



  • ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஊத்துக்கோட்டை அருகே ஒருவர் கைது



  • தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர் மகன் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை



  • பிளஸ் 2 மாணவி பலாத்காரம் ஆசிரியர் சிறையில் அடைப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]