மானசரோவர் யாத்திரை நிறுத்தி வைப்பு
8/14/2017 2:42:52 PM
டேராடுன்: இந்தியா- சீனா எல்லைப் பகுதியான திபெத் மலைப்பகுதியில் கைலாஷ் மானசரோவர் கோயில் அமைந்துள்ளது. இதற்கு வருடம் முழுவதும் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த ஜூன் 16ம் தேதி தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு அனுமதி பெற்று யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரகாண்டில் பெய்து வரும் கன மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
மேலும் மங்க்தி பகுதியில் இரண்டு பாலங்களும், சிம்கோலா பகுதியில் ஒரு பாலமும் சேதம் அடைந்துள்ளது. ஐலகாத், காளி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் சாலைகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி கைலாஷ் மானசரோவர் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.