துளிகள்
8/9/2025 3:51:58 PM
* 5வது சீசன் புரோ கபடி லீக் தொடரில், பெங்களூருவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், பெங்களூரு புல்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
* தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து சமீபத்தில் கைப்பற்றியது. 4 போட்டிகள் கொண்ட ெடஸ்ட் தொடர் ஒன்றில் 250 ரன்கள் குவித்ததுடன், 25 விக்கெட்டுகளுக்கும் மேல் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் மொயின் அலி படைத்தார். இதற்கு உதவி செய்ததற்காக, இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான சக்லைன் முஷ்டாக்குக்கு மொயின் அலி நன்றி தெரிவித்துள்ளார்.
* இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா எதிரணி வீரர்களுடன் எப்போதும் வார்த்தை போரில் ஈடுபட மாட்டார். ஆனால் ஸ்ட்லெஜ்ஜிங்கில் ஈடுபடுவதற்கான உத்திகளை கற்று கொண்டு வருவதாக புஜாரா தெரிவித்துள்ளார்.