நிலுவை தொகை ரூ.97.50 லட்சத்தை கும்ப்ளேவுக்கு வழங்கியது பிசிசிஐ
8/9/2025 3:48:54 PM
புது டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் கும்ப்ளே விலகினார். கேப்டன் விராட் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதலால் கும்ப்ளே ராஜினாமா செய்து விட்டார். அவருக்கு பதில் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கும்ப்ளேவுக்கான நிலுவை தொகை ரூ.97.50 லட்சத்தை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வழங்கியுள்ளது. கடந்த மே மாதத்திற்கான தொழில்முறை கட்டணம் ரூ.48.75 லட்சம், ஜூன் மாதத்திற்கான தொழில்முறை கட்டணம் ரூ.48.75 லட்சம் என இதனை பிசிசிஐ கூறியுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கும் ரூ.1.03 கோடி வழங்கப்பட்டுள்ளது.