இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி : கோவை ஜி.எச்.சில் 110 பேர் அட்மிட்

7/13/2017 3:41:34 PM
பசு பாதுகாப்பு என்ற பெயரில் வகுப்புவாத பதற்றத்தை அனுமதிக்க முடியாது: மோடி எச்சரிக்கை என்எல்சி சுரங்கம் முற்றுகை: 500 ஒப்பந்த தொழிலாளர் கைது

அவிநாசி : திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த முதலிபாளையம் ஊராட்சி புதிய ஆதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயன்(33). கூலி தொழிலாளி. இவர்களது மகள் காவ்யா(4). இவர் இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்துவந்தார். காவ்யாவிற்கு கடந்த சில நாளாக காய்ச்சல் இருந்தது. சேவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று காய்ச்சல் அதிகரிக்கவே காவ்யாவை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே காவ்யா பரிதாபமாக இறந்தார். சிறுமிக்கு வந்தது டெங்கு காய்ச்சலா என சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள பூனாச்சியைச் சேர்ந்தவர் குமரேஷ்வரன் (38). இவரது மனைவி நித்யா (28). இவர்களின் 10 மாத பெண் குழந்தை ரிதன்யா காவேரி. இக்குழந்தைக்கு கடந்த 9ம் தேதி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அந்தியூர் மற்றும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் குணமாகாததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று குழந்தை உயிரிழந்தது.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மைய மருத்துவமனையாக கோவை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினசரி 1,500க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும், 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவமழைக்காலத்தில் தற்போது காய்ச்சல் பரவல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து காணப்படுகிறது. கோைவ அரசு மருத்துவமனையில் இதுவரை காய்ச்சல் பாதிப்பு காரணமாக 110 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 15 பேர் டெங்கு காய்ச்சலுக்கு என அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சில
  • கல்லூரி மாணவி கடத்தல்? பொன்னேரி அருகே பரபரப்பு



  • தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்



  • என்எல்சி சுரங்கம் முற்றுகை: 500 ஒப்பந்த தொழிலாளர் கைது



  • கடன் தொல்லையால் விரக்தி: 2 மகன்கள் கிணற்றில் தள்ளி கொலை



  • பழைய இரும்பு கடையில் குண்டு வெடித்து ஒருவர் பலி: ராணுவ வீரர்கள் விற்றது அம்பலம்



  • பசு பாதுகாப்பு என்ற பெயரால் சட்டவிரோதமாக செயல்படுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்



  • ஓட்டல்களில் திறந்தவெளியில் வைத்து சிலிண்டர் பயன்படுத்துவதால் ஆபத்து



  • நடிகை பாவனா கடத்தல் வழக்கு: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேரிடம் போலீஸ் விசாரணை



  • திமுக பிரமுகர் பிறந்தநாள் ஆர்.எஸ்.பாரதி, கி.வேணு வாழ்த்து



  • ஊத்துக்கோட்டையில் சுவரை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்த லாரி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]