இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் : புதுவை காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு ஜூலை 5க்கு ஐகோர்ட் தள்ளிவைப்பு

6/30/2017 3:34:31 PM
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்

புதுச்சேரி : புதுவையில் 2016 பொதுத்தேர்தலில் வென்ற காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதல்வராக நாராயணசாமி பதவியேற்றதும் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்களுக்கு வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன. இருப்பினும் 3 நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இதையடுத்து மத்திய பாஜ அரசு இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியது. இவ்விஷயத்தில் மாநில அரசுக்கு அக்கறை இல்லை எனக் கூறி மத்திய உள்துறை அமைச்சகமே 3 நியமன எம்எல்ஏ பதவிகளை நிரப்ப முடிவெடுத்ததாக தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்சியாளர்கள் உடனடியாக இப்பதவியை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனிடையே புதுவை ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், வழக்கறிஞருமான லட்சுமிநாராயணன், சென்னை ஐகோர்ட்டில் ஒருமனு தாக்கல் செய்தார். அதில், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 நியமன எம்எல்ஏக்களை நியமிக்க யூனியன் பிரதேச அரசுகளுக்கான சட்டம் வழிவகை செய்கிறது. அதன்படி புதுச்சேரிக்கு நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை நியமிக்க மத்திய அரசும், புதுவை தலைமை செயலரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆனால் இந்த நியமன எம்எல்ஏக்கள் தொடர்பாக புதுவை அரசிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை மாநிலத்தில் ஒரு ஆட்சி இருக்கும்போது அதை கலந்து ஆலோசிக்காமல் எந்த நியமன எம்எல்ஏக்களையும் நியமிக்கக் கூடாது. ஆனால் மத்திய அரசு 3 பேரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டுமென கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பவானி சுப்ராயன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது யூனியன் பிரதேசங்களில் நியமன எம்எல்ஏக்களை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகமும், புதுவை தலைமை செயலாளரும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு விசாரணையை வருகிற 5ம்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் சில
  • மாவட்டம்தோறும் செயல்வீரர் கூட்டம் : டிடிவி தினகரன் முடிவு



  • புத்தாண்டு கொண்டாட்டம் டாஸ்மாக் கடைகளில் ரூ.195 கோடிக்கு மதுவிற்பனை



  • கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்தது



  • தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக்



  • ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்



  • தஞ்சையில் கவர்னர் ஆய்வு: திமுகவினர் கருப்புக்கொடி



  • சட்டப்பேரவை கூட உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது



  • பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட அதிமுக மாஜி எம்எல்ஏ எஸ்கேப்



  • கட்சி பெயர், கொடி, சின்னம் அறிவிப்பு எப்போது? நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் ரஜினி ரகசிய ஆலோசனை



  • ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]