28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது
6/30/2017 3:18:05 PM
அவிநாசி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அட்டப்பட்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (42). இவர் திருப்பூர் அவிநாசியை அடுத்த அ.குரும்பபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது, மாணவிகள் கழிவறையை எட்டிப் பார்ப்பது, வீட்டுப்பாடம் எழுதாத மாணவிகளை கண்டிப்பது போல கன்னம், இடுப்பில் கிள்ளி சில்மிஷம் செய்வது, செல்போன் மூலம் ஆபாச படங்களைக் காட்டுவது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதே பள்ளியில் படிக் கும் 3ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியரின் சில்மிஷம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் உறவினர்களுடன் திரண்டு வந்து ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சேவூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடமிருந்து ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு விசாரணைக்காக சேவூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இந்நிலையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.