இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் : ஜெட்லி தகவல்

6/29/2017 3:45:54 PM
மதுராந்தகம் அருகே பயங்கரம் : கார் மீது அரசு பஸ் மோதல் 5 பேர் பரிதாப சாவு : கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் பிரார்த்தனை

புதுடெல்லி : மத்திய அரசின் மிகப் பெரிய வான் வழி போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் வான் வழி போக்குவரத்து நிறுவனத்தில் மிகப் பெரிய ஒன்றாகும். இதன் மூலம் 140 விமானங்கள் இயக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள 41 நகரங்களுக்கும், இந்தியாவில் 72 நகரங்களையும் இது இணைக்கிறது. மொத்த உள்நாட்டு சந்தையில் 14 சதவீத சந்தையை ஏர் இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவன்த்திற்கு ரூ.52 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடன் சுமை இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அதன் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ஏர் இந்தியா பங்குகளை  தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து பங்குகள் விற்பனை, அதில் மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து முடிவு செய்ய நிதி அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த குழு விரைவில் இதற்கான முடிவுகளை எட்ட உள்ளது என்றார்.
கடந்த 2001ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த பாஜ கூட்டணி அரசு ஏர் இந்தியாவின் 60 சதவீத பங்குகளையும், இந்தியன் ஏர்லைன்சின் 51 சதவீத பங்குகளையும் தனியாருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக அப்போது அது கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியா பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ஜனவரியில் சுவிட்சர்லாந்தில் சிறப்பு பொருளாதார மாநாடு : பிரதமர் மோடி சிறப்புரை



  • காஷ்மீரில் தீவிரவாதிகளாக மாறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு



  • நாடாளுமன்றம் முடங்குவது நாட்டுக்கு நல்லதல்ல: வெங்கய்யா நாயுடு வேதனை



  • குஜராத் முதல்வராக விஜய் ரூபானி நாளை மறுதினம் பதவியேற்கிறார்



  • 2ஜி தீர்ப்பினால் பாஜவின் சாயம் வெளுத்து விட்டது: ராகுல்காந்தி பேட்டி



  • கடன் சுமையால் சத்தீஸ்காில் 1,344 விவசாயிகள் தற்கொலை



  • ஓடிபி நம்பரை நூதனமாக பெற்று காங். எம்பியிடம் 27 ஆயிரம் அபேஸ்



  • மொழிப்பிரச்னையால் வந்த சிக்கல் கர்நாடக கவர்னரை மாற்ற மத்திய அரசு முடிவு



  • காவல்நிலையத்தில் கலவரம் செய்ததாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத் எம்எல்ஏ கைது



  • தூய்மை இந்தியா திட்டத்துக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.667 கோடி நன்கொடை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]