இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஈவ் டீசிங், மாணவிகளுக்கு செருப்படி இளைஞர்களை கைது செய்ய கோரி பஸ் சிறைபிடிப்பு; சாலை மறியல்

6/29/2017 3:41:37 PM
மதுராந்தகம் அருகே பயங்கரம் : கார் மீது அரசு பஸ் மோதல் 5 பேர் பரிதாப சாவு : கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் பிரார்த்தனை

குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை வழியாக தண்ணீர்ப்பள்ளி, பரளி, நால்ரோடு, கருங்கலாப்பள்ளி, பெட்டவாய்த்தலை தடத்தில் ஒரு அரசு பஸ் காலை, மாலை இருவேளை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள்  100 பேர் பயணம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து இந்த பஸ்சில் செல்லும் மாணவிகளை மேட்டுமருதூரை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். அவர்களை கருங்கலாப்பள்ளி இளைஞர்கள் தட்டிக்கேட்டதால் அவர்கள் ஓடிவிட்டனர். நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி மாணவ, மாணவிகள் அந்த பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். பஸ் தண்ணீர்ப்பள்ளி சென்றவுடன் மேட்டுமருதூரை சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து பஸ்சை நிறுத்தி கருங்கலாப்பள்ளி செல்லும் 20க்கும் மேற்பட்ட 10, 12 வயதுடைய மாணவிகளை செருப்பாலும், குச்சியாலும் அடித்து மிரட்டினர். இதை தாங்க முடியாத மாணவ, மாணவிகள் கதறினர். இதுகுறித்து கருங்கலாப்பள்ளிக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனால் கருங்கலாப்பள்ளியை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து கிராமத்துக்கு ஓட்டிச் சென்று தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் அங்கு வந்து இளைஞர்கள் தாக்கியதில் காயமடைந்த மாணவ, மாணவிகளை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர்.
கிராம மக்கள் சார்பில் குளித்தலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து நேற்றிரவு மேட்டுமருதூருக்கு சென்று சம்பந்தப்பட்ட இளைஞர்களை வலை வீசி தேடினர். அவர்கள் தலைமறைவாகிவிட்டதால் ஊர் முக்கியஸ்தரிடம் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞர்களை தாங்களே பிடித்து வந்து ஒப்படைப்பதாக ஊர் முக்கியஸ்தர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • மதுராந்தகம் அருகே பயங்கரம் : கார் மீது அரசு பஸ் மோதல் 5 பேர் பரிதாப சாவு :



  • கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் பிரார்த்தனை



  • சுனாமி தாக்குதலின் 13ம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிப்பு : ஓகி புயலும் உலுக்கியதால் குமரி கிராமங்களில் நீடிக்கும் சோகம்



  • ஜனாதிபதி ராம்நாத் தமிழகம் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை காலை 9 மணிக்கு முடிவு: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு ேபாலீஸ் பாதுகாப்பு



  • செங்கல்பட்டு அருகே சோகம் பைக் மீது லாரி மோதல் 2 எஸ்ஐ பரிதாப சாவு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது



  • கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 4ம் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு



  • மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி 30 அடி பள்ளத்தில் இறங்கிய வேன்: 10 ஐயப்ப பக்தர்கள் காயம்



  • 2ஜி வழக்கு தீர்ப்பால் திமுக அணி வலுப்பெறும்: திருமாவளவன் பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]