மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாரத்தான்
6/28/2017 3:57:06 PM
மதுரை : எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரையில் இன்று 1500 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாளை மறுநாள் (ஜூன்30) மதுரை ரிங்ரோடு பாண்டிகோயில் அருகே நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் இன்று காலை நடந்தது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கிய மாரத்தான் ஓட்டத்திற்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன், டிஆர்ஓ குணாளன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி, மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரோஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கிய ஓட்டம் அழகர்கோயில் ரோடு, தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், வடக்கு வெளிவீதி, ரயில் நிலையம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், மகப்பூப்பாளையம் வழியாக அரசரடியை சென்று அடைந்தது. இதில் 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் முதல்வர் பரிசு வழங்க உள்ளார்.