இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தீ விபத்தில் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் சரிந்தது

6/17/2017 5:59:25 PM
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு

சென்னை: சென்னை தி.நகரில் வடக்கு உஸ்மான் சாலையில் 7 மாடி கட்டிடத்தில் இயங்கிவந்த சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் கடந்த 31ம் தேதி அதிகாலை 4.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 36 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த தீயால் கட்டிடம் உருக்குலைந்தது. இதில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் நாசமானது. ‘‘ஜா கட்டர்” என்ற நவீன இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த 2ம் தேதி தொடங்கியது. கடந்த 9ம் தேதி ஜா கட்டர் இயந்திரம் ஜேசிபி இயந்திரத்தின் மீது சரிந்து விழுந்ததில் வாலிபர் ஒருவர் பலியானார். இதையடுத்து கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக  நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டிடத்தை இடிக்க மண் மேடு அமைத்து பணிகள் மேற்கொண்டதால் ஜா கட்டர் இயந்திரம் சரிந்து விழுந்தது. எனவே மீண்டும் இப்பிரச்சனை ஏற்படாமல் இருக்க கட்டிடத்தை எப்படி இடிப்பது என்பது தொடர்பாகவும், அதற்கான மாற்று வழி குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதன்படி 100 அடி உயரம் கொண்ட கட்டிடத்தில் கண்டிப்பாக 20 அடி மண்மேடு சமன் செய்து அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே போன்று மீண்டும் மண் மேடு அமைத்து கட்டிடம் இடிக்கும் பணி இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. முன்னதாக கட்டிடத்தின் 7வது மாடியில் உள்ள ஒரு பில்லரை தட்டினால் கட்டிடம் சரிந்து விழுந்து விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை அளித்தனர். இதையடுத்து கட்டிடத்தின் அருகில் யாரும் வர வேண்டாம் என்று போலீசார், பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவுரை வழங்கினர். மேலும், அருகில் உள்ள கட்டிடங்களில் உள்ள ஊழியர்கள் வெளியேறுமாறும் தெரிவித்தனர். 50 அடி தூரம் அனைவரும் நிறுத்தி வைக்கப்பட்டனர். இதன்பிறகு ஜா கட்டர் இயந்திரம் மூலம் ஆபத்தான நிலையில் 7வது மாடியில் இருந்த கட்டிடத்தின் பில்லரை தட்டியவுடன் பயங்கர சத்ததுடன் கட்டிடம் சரிந்து விழுந்தது.

தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மற்றொரு பகுதி கட்டிடதத்தை இடிக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஊழியர்கள் மீண்டும் ஈடுபட்டனர். இன்று மாலைக்குள் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு விடும் என்றும், வழக்கம் போல் நாளை முதல் இந்த மேம்பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆபத்தான நிலையில் நிற்கும் கட்டிடத்தின் பாதி பகுதி: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் பாதி பகுதி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழ வாய்ப்புள்ளது. மேலும், கட்டிடம் முன்புறம் இடிந்து விழுந்தால் பாலத்திற்கு சேதம் ஏற்படும். எனவே, கட்டிடம் பின்புறமாக விழுந்தால் பிரச்சனை ஏற்படாது என்பதால் அதற்கான வேலைகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

மேலும் சில
  • இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை



  • டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு



  • தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் தமிழக அரசு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்



  • புதுகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : 190 கோடி நல உதவிகள் முதல்வர் வழங்குகிறார்



  • கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் கருகி பலி



  • வரும் நவம்பர் மாதத்துக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: செங்கோட்டையன் தகவல்



  • தமிழக காங்கிரஸ் தலைவர் யார்?: ராகுல்காந்தியுடன், திருநாவுக்கரசர் இன்று சந்திப்பு



  • டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி



  • சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் கூடாது குறைந்த விலையில் தின்பண்டம்: அரசிடம் வலியுறுத்த விஷால் முடிவு



  • ஊதிய உயர்வு கோரி காட்டாங்கொளத்தூரில் 3வது நாள் போராட்டம் தனியார் மருத்துவமனை நர்ஸ்கள் கைகளை பிடித்து இழுத்து தனி அறையில் சரமாரி தாக்கு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]