இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கோவை சிறையில் அடையாள அணிவகுப்பு

6/16/2017 5:10:11 PM
ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது கழிவு நீர் டேங்க் சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி: கோவையில் இன்று பரிதாபம்

கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு ஜெயலலிதா எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில், நீலகிரி மாவட்ட தனிப்படை போலீசார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். முதல் குற்றவாளி கனகராஜ் சேலம் கார் விபத்தில் இறந்து விட்டார். 2வது குற்றவாளி சயான் கேரள மாநிலம் பாலக்காட்டில் விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கேரளாவை சேர்ந்த ஜிபின் ஜோய், ஜம்சீர் அலி ஆகியோர் கேரள மாநிலம் மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாமியார் மனோஜ், கூலிப்படை கும்பலை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், மற்றொரு மனோஜ், குட்டி பிஜின் ஆகிய 7 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், குட்டி பிஜின் தவிர மீதமுள்ள 6 பேரை அடையாளம் காட்டுவதற்கான அடையாள அணிவகுப்பு, கோவை மத்திய சிறையில் கடந்த மாதம் நடந்தது. எஸ்டேட்டில், கொள்ளையர் தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய காவலர் கிருஷ்ணபகதூர், 6 பேரையும் சரியாக அடையாளம் காட்டினார்.


இவ்வழக்கில், கடைசியாக கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த குட்டி பிஜின் என்பவரை, அடையாளம் காட்டுவதற்கான, அடையாள அணிவகுப்பு கோவை மத்திய சிறையில் நேற்று நடந்தது. அப்போதும், கிருஷ்ணபகதூர் சரியாக அடையாளம் காட்டினார். 10 கைதிகளுக்கு இடையே குட்டி பிஜினை நிற்க வைத்து மாறி, மாறி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இருப்பினும் குழப்பம் இன்றி அடையாளம் காட்டினார். குட்டி பிஜின், ஜெயலலிதா எஸ்டேட் பங்களா அறைக்கதவுகளின் பூட்டை உடைத்துள்ளார். ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பயன்படுத்திய சூட்கேஸ் பூட்டையும் உடைத்து, திறந்துள்ளார். கள்ளச்சாவி மற்றும் கம்பி மூலமாக பூட்டுக்களை திறப்பதில் இவர் கில்லாடி. கொள்ளை நடந்த தினத்தில் குட்டி பிஜின் எந்தெந்த அறைக்கு சென்றார். இவருடன் யார், யார் சென்றார்கள் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

மேலும் சில
  • டெல்லியில் இளம் பெண்ணை 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம்



  • ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த 8 பேர் கும்பல் அதிரடி கைது



  • தாய், மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன்? : தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்



  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



  • திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம்: போலீஸ்காரருக்கு வலை



  • குமரி அருகே இன்று காலை பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் குத்திக்கொலை: எம்பிபிஎஸ் மாணவர் கைது



  • கைதான 8 பேர் கோர்ட்டில் இன்று ஆஜர்: கோவை ஏடிஎம் கொள்ளை கும்பல்: தலைவனை பிடிக்க தனிப்படை



  • உ.பியில் பயங்கரம்: மைனர் பெண் தீ வைத்து எரிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]