இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட கர்நாடக வாலிபர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பு

6/16/2017 5:05:13 PM
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் தமிழக அரசு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம் புதுகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : 190 கோடி நல உதவிகள் முதல்வர் வழங்குகிறார்

புதுடெல்லி: ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கர்நாடக வாலிபர் உள்ளிட்ட 3 பேரை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாட்கல் நகரைச் சேர்ந்தவர் முகமது முகமது ஷபி அர்மர் (வயது 30). இவர், இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருவதாக கூறப்படுகிறது. முகமது ஷபி அர்மர், அவரது கூட்டாளிகள் ஒசாமா அகமது அதர், முகமது இஸா யூசுப் ஸகர் அலி பினாலி ஆகியோரை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்க அரசு நேற்று அறிவித்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி முதன்முறையாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து இளைஞர்களை மூளை சலவை செய்து ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, தீவிரவாத சதி செயல்கள், சட்ட விரோத ஆயுத கொள்முதல், தீவிரவாத பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ளது.

டெல்லியிலும், ஹரித்துவாரில் அர்த் கும்பமேளாவிலும் பயங்கர தாக்குதல்  நடத்த சதித்திட்டம் தீட்டியதாக இவர் உள்பட 6 பேர் மீது தேசிய புலனாய்வு  அமைப்பு தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது.
அர்மர் ஏற்கனவே இந்தியன் முஜாகிதீன் அமைப்பிலும் உறுப்பினராக இருந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு இதே போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்த இவரது சகோதரர் சுல்தான் அர்மர் மறைவுக்கு பிறகு இந்த பணியை முகமது ஷபி அர்மர் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அர்மருடன் மற்ற இரண்டு கூட்டாளிகளும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். பாரீஸ், புரூசெல்ஸ் ஆகிய நகரங்களில் நடந்த தாக்குதல்களில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் அர்மர் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க அமெரிக்கா வலை விரித்துள்ளது.

மேலும் சில
  • தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட தடை : மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • கருப்பு பணத்தில் எனது பங்கு 15 லட்சம் எங்கே? : பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி பகீர் கடிதம்



  • கிராமங்களில் பணிபுரியாத 4 ஆயிரம் டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து : மகாராஷ்டிரா அரசு அதிரடி



  • சீனாவுக்கான இந்திய தூதராக கவுதம் பம்பாவாலே நியமனம்



  • ராணுவ வீரர்களுடன் தீபாவளி நிர்மலா சீதாராமன் முடிவு



  • சரியாக உணவு கூட கொடுக்காமல் உயர் அதிகாரிகள் ஓய்வின்றி வாட்டி வதைக்கின்றனர்: ரிசர்வ் படை வீரர் வீடியோவால் சர்ச்சை



  • தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீரபத்ரசிங் உறவினர்கள் பாஜவுக்கு தாவல்: காங். அதிர்ச்சி



  • திருமணமான மைனர் பெண்களின் எண்ணிக்கை 2.3 கோடி: ஆய்வில் தகவல்



  • ஆருஷி கொலை வழக்கு ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய சிபிஐ முடிவு



  • காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பர் 18ம் தேதி முடிவுகள் வெளியாகும்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]