இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அன்னிய செலாவணி மோசடி வழக்கு 21ம் தேதி வீடியோ கான்பரன்சிங்கில் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு

6/13/2017 5:09:07 PM
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் எதிர்த்து வழக்கு : ஐகோர்ட்டில் டெல்லி வக்கீல்கள் கடும் வாதம் சென்னையில் குழந்தையை கடத்திய சேலம் பெண்ணிடம் இருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு

சென்னை: ஜெஜெ.டிவிக்கு அப்லிங்க் வசதிகளை ஏற்படுத்தியதிலும் கருவிகளை வாடகைக்கு எடுத்ததிலும் பல கோடி அன்னிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா மீது 1996ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சசிகலா சிறையில் இருப்பதால் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மீதான விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்துவதற்கு நீதிபதி ஜாகிர் ஹுசைனும் அனுமதி அளித்தார்.
 இதையடுத்து, சசிகலா தரப்பு மூத்த வக்கீல், ‘முன்கூட்டியே கேள்விகளை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே கேள்விகளை முன்கூட்டியே அளிக்க வேண்டும் என்று வாதிட்டார். அமலாக்கத்துறை வக்கீல், ‘சட்டத்தில் இடம் இருந்தாலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்படும் போது நேரடியாக தான் கேள்விகள் கேட்கப்படபோகிறது. குற்றச்சாட்டு பதிவு செய்யும் போது நீதிமன்றத்திற்கும், குற்றம்சாட்டப்பட்டவருக்கும் தான் வேலை. வக்கீல்களுக்கு எந்த வேலையும் இல்லை எனவே கேள்விகளை முன்கூட்டியே அளிக்க முடியாது’ என்றார்.

இந்நிலையில், இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜாகிர் ஹூசைன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘’வீடியோ கான்பரன்ஸ் மூலம் சசிகலாவிடம் விசாரணை நடத்தும் போதும், அவருடன் ஆங்கிலம் தெரிந்த ஒருவர் இருக்க அனுமதிக்க வேண்டும்’’ என கூறப்பட்டு இருந்தது.  “சிறைத்துறை இதற்கு அனுமதி அளிக்காது” என்று அந்த மனுவை நீதிபதி மறுத்தார். இதையடுத்து, இவ்வழக்கை 21ம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன் அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி அன்றைய தினம் வீடியோகான்பரன்சிங் மூலம் சசிகலா ஆஜராக வேண்டும்.

மேலும் சில
  • 14 கடலோர மாவட்டங்களில் 48 மணி நேர “சாகர் கவச்” பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது



  • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு : நாளை நடக்கிறது



  • வேன் மீது பைக் மோதி தூக்கி வீசப்பட்டு : ரோட்டில் விழுந்த வாலிபர்கள் 2 பேர் பஸ்சில் சிக்கி சாவு.



  • 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் எதிர்த்து வழக்கு : ஐகோர்ட்டில் டெல்லி வக்கீல்கள் கடும் வாதம்



  • சென்னையில் குழந்தையை கடத்திய சேலம் பெண்ணிடம் இருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு



  • காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க தமிழக உளவுத்துறை போலீசார் முயற்சி : மாலை நடைபெறும் கூட்டத்தில் விவாதம்



  • காவல்துறை செயல்பாடு மோசம் : முதல்வருக்கு, கிரண்பேடி கடிதம்



  • செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய டிரைவர் லைசென்ஸ் ரத்து



  • இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை



  • காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை நீட்டிப்பு : தமிழக அரசு பதில் மனு தாக்கல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]